லிபியாவில் இராணுவத்தை ஏவிவிட்டு தமக்கு எதிரானவர்களின் போராட்டத்தை முறியடிக்க அதிபர் கடாபி மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டது.
லிபியாவில் அதிபர் கடாபி பதவி விலக கோரி ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் கிளர்ச்சியாளர்கள், தலைநகர் டிரிபோலி உள்ளிட்ட பல இடங்களை கைப்பற்றியுள்ளனர்.
அவர்களுக்கு இராணுவத்தினரும் பெருமளவில் ஆதரவாக உள்ளனர்.
இந்நிலையில் கடாபி இராணுவத்தில் ஏற்படுத்தி வைத்துள்ள தமது அதி தீவிர விசுவாச படையை இன்று கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக ஏவிவிட்டார்.
டிரிபோலியில் திரண்டிருந்த் போராட்டக்காரர்கள் மீது பீரங்கி மற்றும் போர் விமானங்கள் மூலம் கடாபி ஆதரவு இராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர்.
பதிலுக்கு கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவான இராணுவத்தினரும் தாக்குதல் நடத்தியதாகவும், சுமார் 6 மணி நேரம் நடந்த தீவிர சண்டைக்கு பின்னர் கடாபி ஆதரவு இராணுவத்தினர் பின்வாங்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.