இந்தியாவுடன் பாகிஸ்தான் ஆக்கபூர்வ உறவு வைத்துக்கொள்வது அவசியமானதாகும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அயலுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் பி.ஜே.குரோலி கூறுகையில், பாகிஸ்தானுடன் ஆப்கானிஸ்தான் எப்படி உறவு வைக்கவேண்டியது அவசியமோ அது போல் இந்தியாவுடன் பாகிஸ்தான் உறவு வைத்துக் கொள்வது மிகவும் நல்லதாகும்.
இந்த அண்டை நாடுகள் தமக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை எதிரிக்கு 2 கண் போகட்டுமே என்ற மனோநிலையை வளர்த்துக் கொள்ளக்கூடாது.
இந்த நாடுகள் தமக்குள் நெருக்கத்தை வளர்த்துக் கொண்டால் அவற்றை எதிர்நோக்கியுள்ள பயங்கரவாத அச்சுறுத்தலை துணிவுடன் எதிர்கொண்டு ஒடுக்கமுடியும் என அமெரிக்கா கருதுகிறது என்று குரோலி கூறினார்.