Webdunia - Bharat's app for daily news and videos

Install App

648 இந்தியர்கள் பாகிஸ்தான் சிறைகளில் அடைப்பு

Webdunia
வெள்ளி, 2 ஜூலை 2010 (17:47 IST)
பாகிஸ்தான் சிறைகளில் உள்ள இந்தியக் கைதிகளின் பட்டியலை அந்நாட்டு அயலுறவுத் துறை அமைச்சகம் அளித்துள்ள நிலையில்,648 இந்தியர்கள் அந்நாட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்த பட்டியல் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு மே மாதம் இரு நாடுகளும் இது தொடர்பாக செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த பட்டியலை பாகிஸ்தான் அளித்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி இரு நாடுகளும் ஒவ்வொரு ஆண்டு ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் பரஸ்பரம் கைதிகளின் பட்டியலை பரிமாறிக்கொள்ள வேண்டும்.

பாகிஸ்தான் அளித்துள்ள பட்டியலின்படி, 648 இந்தியர்கள் அந்நாட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அதே சமயம் கடந்த் ஜனவரி 1 ஆம் தேதி இந்தியா அளித்த பட்டியலின்படி, 633 பாகிஸ்தானியர்கள் இந்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்தியா தரப்பில் ஜூலை 1 ஆம் தேதி அளிக்கப்பட வேண்டிய கைதிகளின் பட்டியல் இன்னும் அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2வது நாளாக ஏற்றத்தில் பங்குச்சந்தை.. மீண்டும் பழைய நிலைக்கு செல்லுமா?

பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் சென்னையில் திடீர் கைது.. என்ன காரணம்?

திருமணமான 5 நாட்களில் மணமகள் மாயம்! நகை, பணம் திருடி சென்றதால் அதிர்ச்சி..!

புழல் சிறையில் ஐகோர்ட் நீதிபதிகள் திடீர் சோதனை.. ஆய்வுக்கு பின் நீதிபதிகள் சொன்னது என்ன?

போராட்டம் நடத்துங்க!? இந்த 3 மாவட்டங்கள் முதல் டார்கெட்! - தவெக விஜய் அதிரடி!?

Show comments