Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வான‌‌ம் முழுது‌ம் சாம்பல்: 17,000 ‌விமான‌ங்க‌ள் ர‌த்து

Webdunia
சனி, 17 ஏப்ரல் 2010 (11:22 IST)
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சாம்பல் பரவியதால், ஐரோப்பா கண்டத்தில் 3-வது நாளாக விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டு‌ள்ளது. இதனா‌‌ல ் உலக‌ம் முழுவது‌ம ் 17 ஆ‌யிர‌ம ் ‌ விமான‌‌ங்க‌ள ் ர‌த்த ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

ஐஸ்லாந்து நாட்டில் எய்ஜஜல்லஜோகுல் பனிமலையின் அடியில் உள்ள ஒரு எரிமலை, இந்த மாதத்தில் 2-வது முறையாக, நேற்று முன்தினம் வெடித்தது. இதனால் 'லாவா' எனப்படும் எரிமலை குழம்பு வெளியேறியது.

இந்த குழம்பால், பனிமலையில் உள்ள பனிக்கட்டிகள் உருகி தண்ணீர் வழிந்தோடியது. இதனால், கீழ்ப்பகுதியில் குடியிருந்த பொதுமக்கள் வீடுகளில் இருந்து ஓட்டம் பிடித்தனர்.

மேலும், எரிமலை குழம்பால் புகையுடன் சாம்பல் பீறிட்டுக் கிளம்பியது. வானத்தில் பல மைல் உச்சிக்கு கருப்பு நிற சாம்பல் பீய்ச்சி அடிக்கப்பட்டது. 6 ஆயிரம் மீட்டர் முதல் 11 ஆயிரம் மீட்டர் உச்சிக்கு சாம்பல் பறந்தது. அத்துடன், வடக்கு ஐரோப்பாவில் உள்ள நாடுகளுக்கும் சாம்பல் பரவி, வான்பகுதியை அடைத்துக் கொண்டது.

இந்த சாம்பல், விமானங்களின் என்ஜினில் ஊடுருவி, விமானத்தை செயல் இழக்கச் செய்யக் கூடியவை. மேலும், கருப்பு சாம்பலாக இருப்பதால், விமானிகளால் எதையும் பார்க்க முடியாத நிலை ஏற்படும்.

எனவே, ஐரோப்பா கண்டத்தில் நேற்று முன்தினம் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்பு, இ‌ன்ற ு 3- வது நாளாக நீடித்தது. லண்டனில் உள்ள பிரபலமான ஹீத்ரு விமான நிலையம், தினமும் 1,200 விமானங்களை கையாளக்கூடியது. ஆனால், சாம்பல் காரணமாக, அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.

இதனால், 1 லட்சத்து 80 ஆயிரம் பயணிகள் தங்கள் இடங்களுக்குச் செல்ல முடியாமல் தவித்தனர். இங்கிலாந்தின் மற்ற முக்கிய விமான நிலையங்களில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், 1 லட்சத்து 20 ஆயிரம் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

பிரான்ஸ் நாட்டில் உள்ள 24 விமான நிலையங்கள் மூடப்பட்டன. அயர்லாந்து, டென்மார்க், நார்வே சுவீடன், பின்லாந்து, போலந்து, லிதுவேனியா, பெல்ஜியம் ஆகிய நாடுகளின் விமான நிலையங்களும் மூடப்பட்டன.

இந்தியாவில் இருந்து லண்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் ஏர் இந்தியா, ஜெட் ஏர்வேஸ், கிங்பிஷர்ஸ் ஆகியவற்றின் விமானங்கள் காலவரையின்றி நிறுத்தி வைக்கப்பட்டன.

ஐரோப்பா வழியாக அமெரிக்கா, கனடா செல்லும் விமானங்களும் நிறுத்தப்பட்டன. ஆசியாவுக்கும், ஐரோப்பாவுக்கும் இடையிலான விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. சீனா, ஜப்பான், ஆஸ ்‌ ட்ரேலியா ஆகிய நாடுகளில் இருந்து ஐரோப்பாவுக்கு இயக்கப்படும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.

ஜெர்மனி நாட்டின் பிராங்க்பர்ட் விமான நிலையம் மூடப்பட்டது. அமெரிக்கா-இங்கிலாந்து இடையே நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. உலக‌ம் முழுவது‌ம ் சுமா‌ர ் 17 ஆ‌யிர‌ம ் ‌ விமான‌ங்க‌ள ் ர‌‌த்த ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ள ன.

இந்த நிலைமை எப்போது சீரடையும் என்று தெரியவில்லை. எரிமலை வெடிப்பது நீடித்தால், இன்னும் 6 மாதங்களுக்கு விட்டு விட்டு பிரச்சனை நீடிக்கும் என்று எரிமலை ஆராய்ச்சியாளர் ஒருவர் தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

Show comments