Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியரைத் தாக்கிய ஆஸ்ட்ரேலிய நபருக்கு 3 மாதம் சிறை

Webdunia
சனி, 16 ஜனவரி 2010 (19:00 IST)
இந்திய கார் ஓட்டுனர் ஒருவரை நிறவெறி வசை செய்து, தாக்கிய ஆஸ்ட்ரேலிய நபருக்கு அந்த நாட்டு நீதிமன்றம் 3 மாதகாலம் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

ஆஸ்ட்ரேலியாவின் விக்டோரியாவில் உள்ள பல்லார்ட் என்ற இடத்தைச் சேர்ந்த பால் ஜான் பிராக்டன் என்ற ஆஸ்ட்ரேலியர் இந்திய டாக்ஸி டிரைவர் சதீஷ் தடிபமுலா என்பவரின் காரில் பயணம் செய்தார்.

ஆனால் நன்றாக குடித்திருந்த பிராக்டன், டிரைவர் தன்னை எங்கோ அழைத்துச் செல்கிறார் என்று தவறாக நினைத்துக் கொண்டு, தகாத வார்த்தைகளால் அவரது பிறப்பையும், இந்தியாவையும் கடுமையாக திட்டிய படியே தக்கியுள்ளார்.

இதில் அவரது காரும் சற்றே சேதமடைந்தது. இதனையடுத்து அந்த ஆஸ்ட்ரேலியருக்கு 3 மாத கால சிறை வாசம் தண்டனையாக விதிக்கப்பட்டுள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments