Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தோனேஷியாவில் கடும் நிலநடுக்கம்: 7 பேர் பலி

Webdunia
புதன், 2 செப்டம்பர் 2009 (17:12 IST)
இந்தோனேஷியாவின் ஜாவா தீவுப் பகுதியில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.3 ஆகப் பதிவானதாக அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய நேரப்படி இன்று மதியம் 1.25 மணியளவில் ஜாவா தீவின் கடற்கரைப் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில் 50 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடக்கு ஜாவா மாகாணத்தைச் சேர்ந்த 7 பேர் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்ததாக அந்நாட்டு பேரிடர் மேலாண்மை மையத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நிலநடுக்கத்தின் தாக்கம் கடுமையாக இருந்ததால் பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்தது. எனினும் ஒரு மணி நேரத்திற்குப் அது திரும்பப் பெறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செலவு கோடி ரூவாப்பே.. ஆனால் கோவில் நிலையோ பரிதாபம்! - காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு தடை!

வருஷம் 3 கோடி சம்பளம்.. வீடு, கார் சகல வசதிகளும்..! ஆனா யாரும் வரமாட்றாங்க! - ஆஸ்திரேலியாவில் ஒரு விநோத பகுதி!

ராம்குமார் கடனை என்னால் தர முடியாது.. நீதிமன்றத்தில் மறுப்பு தெரிவித்த சிவாஜி மகன் பிரபு..!

மருதமலை முருகன் கோவில் வெள்ளிவேல் திருடு போகவில்லை: நிர்வாகம் விளக்கம்..!

வக்பு நிலத்தை அபகரித்தாரா கார்கே.. மாநிலங்களவையில் கடும் வாக்குவாதம்..!

Show comments