Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போரை நிறுத்த முடியாது: சிறிலங்கா திட்டவட்டம்

Webdunia
வியாழன், 14 மே 2009 (15:31 IST)
இலங்கையில் உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என ஐ.நா. பாதுகாப்புப் பேரவை, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆகியோர் விடுத்துள்ள வேண்டுகோளை சிறிலங்க அரசாங்கம் நிராகரித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிறிலங்க அரசின் ஊடகத்துறை அமைச்சர் லட்சுமண் யாபா, விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரை நிறுத்த வேண்டும் என்ற சர்வதேச நாடுகளின் கோரிக்கைக்கு அடிபணியப் போவதில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இலங்கையைப் போல் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானிலும் போர் நடந்து வருகிறது. ஆனால் அங்குள்ள அரசுகளை போர்நிறுத்தம் செய்யவோ, அமைதி உடன்பாடு செய்து கொள்ளவோ யாரும் வலியுறுத்துவதில்லை. இலங்கை அரசுக்கு மட்டும் ஏன் தொடர்ந்து சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்கிறது.

சர்வதேச உத்தரவுகளுக்கு நாங்கள் கீழ் படிய முடியாது. அவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக போரை நிறுத்த மாட்டோம். சர்வதேச சட்டங்களை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் அதற்காக போரை நிறுத்துவது சரியாக இருக்காது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அயோத்தி கோயில் கும்பாபிஷேகத்திலும் திருப்பதி லட்டு விநியோகம்..! விசாரணை நடத்த வேண்டும் - தலைமை அர்ச்சகர்.!!

அனைத்து சாதி அர்ச்சகர்களுக்கு அவமரியாதை - இதுவா திராவிட மாடல் சமூக நீதி.? ராமதாஸ் கண்டனம்..!

மக்களை திசை திருப்புவதற்காக தமிழகத்திற்கு லட்டு பிரச்சனை- சீமான் பேச்சு!

தடையில்லா சான்று வக்பு நிலத்திற்கு கொடுக்க முடியாது -நவாஸ் கனி எம்பி பேச்சு!

Show comments