Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனா: நிலக்கரி சுரங்க விபத்தில் 18 பேர் பலி

Webdunia
ஞாயிறு, 19 ஏப்ரல் 2009 (11:02 IST)
சீனாவின் மத்திய பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

அந்நாட்டின் ஹுனன் மாகாணத்தில் உள்ள சென்சுவோ நகரில் செயல்பட்டு வரும் நிலக்கரி சுரங்கத்தில், வைக்கப்பட்டிருந்த வெடி பொருட்கள் எதிர்பாராத விதமாக நேற்று மதியம் வெடித்ததாக நிலக்கரி தொழிற்சாலை அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்தார்.

இன்று காலை வரை மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணியில் இதுவரை 18 பேர் உயிரிழந்ததாகவும், காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார்.

நிலக்கரி சுரங்கத்தில் சட்டத்திற்கு புறம்பாக வெடி பொருட்கள் பதுக்கி வைத்ததே விபத்திற்கு காரணம் என்று காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், விபத்தின் போது சுரங்கத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த 2 நபர்கள் குறித்து தகவல் இல்லாததால் அவர்களும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை எஸ்டிபிஐ அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை.. தொண்டர்கள் திரண்டதால் பரபரப்பு..!

இந்த கைது பூச்சாண்டிக்கெல்லாம் நாங்கள் பயந்து பின்வாங்கப்போவதில்லை.. அண்ணாமலை

2வது நாளாக ஏற்றத்தில் பங்குச்சந்தை.. மீண்டும் பழைய நிலைக்கு செல்லுமா?

பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் சென்னையில் திடீர் கைது.. என்ன காரணம்?

திருமணமான 5 நாட்களில் மணமகள் மாயம்! நகை, பணம் திருடி சென்றதால் அதிர்ச்சி..!

Show comments