Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் - மத்திய அரசு பேச்சுவார்த்தை

Webdunia
ஞாயிறு, 12 ஏப்ரல் 2009 (11:38 IST)
இலங்கை பிரச்சனை தொடர்பாக, புலிகளுக்கு ஆதரவான தமிழ் தேசிய கூட்டணி கட்ச ி‌யி‌ன் நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள ் வரும் 16 மற்றும் 17ம் தேதிகளில் டெல்லியில் இந்திய அரசுடன் பேச்சு வார்த்தை நடத்துகின்றனர்.

இலங்கையில் சிங்களப் படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில் போருக்கு பின்னர் ஏற்படும் நிலைமை குறித்து பேச்சு வார்ததை நடத்துவதற்காக இந்தியா வரும்படி இலங்கையில் புலிகளுக்கு ஆதரவான தமிழ் தேசிய கூட்டணி கட்சிக்கு, இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர் மேனன் அழைப்பு விடுத்திருந்தார்.

இதுதொடர்பாக, தமிழ் தேசிய கூட்டணி கட்சியின் நாடாளு‌ம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் ஆலோசனை நடத்தினர். முதலில், இந்தியாவின் அழைப்பை நிராகரிக்க முடிவு செய்யப்பட்ட போதிலும், பின்னர் இந்திய அரசுடன் பேச்சு வார்த்தை நடத்த தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, அக்கட்சியின் 5 நாடாளும‌ன்ற உ‌று‌ப்‌பின‌ர்க‌ள ் கொண்ட குழு வரும் 16 மற்றும் 17ம் தேதிகளில் டெல்லியில் நடைபெறும் பேச்சு வார்த்தையில் பங்கேற்கிறது.

இலங்கை பிரச்சனை தொடர்பாக, இந்திய அரசு செய்த தவறுகளை சுட்டிக்காட்டுவதற்காகவே தமிழ் தேசிய கூட்டணி கட்சி நாடாளும‌ன் ற உ‌று‌ப்‌பின‌ர்க‌ள் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துக்கொள்ள முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உத்தரகாண்ட் மாநிலத்தில் கனமழை பெரும் சேதம்: ஆற்றில் உள்ள சிவன் சிலை மூழ்கும் அளவுக்கு வெள்ளப்பெருக்கு..!

மழையில் நனைந்து கொண்டு செல்போன் பேசலாமா? அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்..

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் வீட்டில் விசேஷம்.. குவியும் வாழ்த்துக்கள்..!

சீதை பிறந்த நகரின் வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.887 கோடி. முதல்வர் நிதிஷ்குமார் ஒப்புதல்..!

வீடுதோறும் சென்று மக்களை சந்திக்கும் திட்டம்.. ஈபிஎஸ் வீட்டுக்கும் செல்வாரா முதல்வர்? அவரே கூறிய பதில்..!

Show comments