Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவல்துறை பயிற்சி மையத்தில் துப்பாக்கிச்சூடு: பாகிஸ்தானில் 20 காவலர் பலி

Webdunia
திங்கள், 30 மார்ச் 2009 (11:51 IST)
பாகிஸ்தானின் வாகா எல்லைப் பகுதிக்கு அருகே செயல்பட்டு வரும் காவல்துறை பயிற்சி மையத்திற்குள் இன்று காலை புகுந்த பயங்கரவாதிகள் நடத்திய அதிரடித் தாக்குதலில் 20 காவலர்கள் உயிரிழந்துள்ளனர்.

மேலும், பயிற்சிப் மையத்தில் இருந்த சுமார் 800க்கும் அதிகமான காவலர்களை பயங்கரவாதிகள் பிணையக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாகா எல்லைப் பகுதிக்கு அருகே மனாவான் பகுதியில் செயல்பட்டு வரும் காவலர் பயிற்சி மையத்தில் இன்று காலை 7 மணியளவில் காவலர்கள் போல் உடையணிந்த சுமார் 10 முதல் 14 பேர் கொண்ட கும்பல் அதிரடியாக நுழைந்து கையெறி குண்டுகளை வீசியதுடன், துப்பாக்கிச்சூடும் நடத்தியதாக அந்நாட்டுத் தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டுள்ளன.

இத்தாக்குதலில் குறைந்தது 20 காவலர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாகவும், 30க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்டுவோம்: செல்வப்பெருந்தகை..!

ஈஷாவில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!

நான் சிபிஎஸ்சி பள்ளி எதுவும் நடத்தவில்லை.. அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு திருமாவளவன் பதில்..!

2 ஓவரில் 2 விக்கெட் இழந்தாலும் சுதாரித்த வங்கதேசம்.. இந்தியாவுக்கு இலக்கு என்ன?

பெங்களூரில் பிரமாண்டமான கூகுள் அலுவலகம்.. சமஸ்கிருத பெயர் வைப்பு..!

Show comments