Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிலிப்பைன்ஸ் பாதுகாப்பு படையினர்-பிரிவினைவாதிகள் மோதல்: 27 பேர் பலி

Webdunia
சனி, 28 மார்ச் 2009 (11:23 IST)
பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியில் ராணுவ வீரர்களுக்கும், முஸ்லிம் பிரிவினைவாத அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே நடந்த மோதலில் 20 பிரிவினைவாதிகள், 7 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

பிலிப்பைன்ஸின் அதிபராக இருப்பவர் குளோரியா அர்ரோயா. இவர் அந்நாட்டின் மமசபனோ பகுதியில் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டிருந்தார். இதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

குளோரியாவின் சுற்றுப்பயணத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மோரோ இஸ்லாமிக் விடுதலை முன்னணி என்ற பிரிவினைவாத அமைப்பைச் சேர்ந்த 60 பேர் கொண்ட கும்பல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்களைத் நேற்று முன்தினம் தாக்கியது.

இதையடுத்து நேற்று மமசபனோவுக்கு குளோரியா சென்றார். இதன் காரணமாக முஸ்லிம் பிரிவினைவாதிகள், பாதுகாப்பு படையினர் மீது மீண்டும் தாக்குதல் நடத்தினர். இருதரப்புக்கும் இடையே நடந்த மோதலில் 20 பிரிவினைவாதிகள், 7 படையினர் உயிரிழந்ததாக அந்நாட்டு ராணுவ செய்தித் தொடர்பாளர் ஜொனாதன் போன்ஸ் இன்று தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

Show comments