Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் அமெரிக்காவுடன் கூட்டு: இந்தியா விருப்பம்

Webdunia
புதன், 25 மார்ச் 2009 (12:19 IST)
பூமியின் பருவநிலை மாறி வரும் நிலையில், எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்த அமெரிக்காவுடன் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் கூட்டு வைத்து கொள்ள இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது.

வாஷிங்டனில் நடந்த அமெரிக்க-இந்திய வர்த்தகப் பேரவையின் உறுப்பினர் கூட்டத்தில் இதனைத் தெரிவித்த பருவநிலை மாற்றத்திற்கான பிரதமரின் சிறப்புக் குழுவின் தலைவர் ஷ்யாம் சரண், இந்தியா, அமெரிக்கா மற்றும் ஒட்டுமொத்த உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு எரிசக்தி பற்றாக்குறை ஒரு தடைக்கல்லாக இருக்கக் கூடாது என விரும்பினால், புதுப்பிக்கக் கூடிய, மரபுசாரா எரிசக்திக்கு நாம் மாற வேண்டும் என்றார்.

பருவநிலை மாற்றமும், எரிசக்தி பாதுகாப்பும் இதனை நமக்கு உணர்த்தியுள்ளதாக தெரிவித்த அவர், கார்பன் இல்லாத பொருளாதாரத்திற்கு உலக நாடுகளை அழைத்துச் செல்ல நேர்மையான, உண்மையான பன்முகத் தன்மையுடைய திட்டம் வகுக்கப்பட அனைத்து நாடுகளும் கூட்டாக இணைந்து செயல்பட வேண்டும் என்றார்.

இவ்விடயத்தில் உலக நாடுகளுக்கு அமெரிக்கா தலைமை தாங்கி வழிநடத்திச் செல்வதைக் காண இந்தியா விரும்புவதாகவும் ஷ்யாம் சரண் தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக அரசின் டாஸ்மாக் வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்: அமலாக்கத்துறை

திமுக அல்லது அதிமுக பலவீனப்பட்டால் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி: திருமாவளவன்

கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு.. முதல் விவசாய பொருளுக்கு கிடைத்த பெருமை..!

இபாஸ் இல்லாத வாகனங்களை திருப்பி அனுப்பும் அதிகாரிகள்.. ஊட்டியில் சுற்றுலா பயணிகள் அவதி..!

நாடாளுமன்றத்தில் ‘எம்புரான்’ குறித்து காரசார விவாதம்: மக்களவை ஒத்திவைப்பு..!

Show comments