Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் செல்கிறார் ரிச்சர்ட் பெளச்சர்

Webdunia
திங்கள், 5 ஜனவரி 2009 (12:33 IST)
மும்பையின் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பான புலனாய்வு குறித்து ஆராயவும், இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றத்தைத் தணிக்கவும் அமெரிக்க அயலுறவு உதவி அமைச்சர் ரிச்சர்ட் பெளச்சர் பாகிஸ்தான் செல்கிறார்.

மும்பை பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் நேரடியாக விசாரணை நடத்த இந்தியாவிற்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ள நிலையில், அது தொடர்பான புலனாய்வில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து பேச இன்று பாகிஸ்தான் வரும் ரிச்சர்ட் பெளச்சர், பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி ஜர்தாரி, பிரதமர் யூசுஃப் ராசா கீலானி, அயலுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி ஆகியோரை சந்தித்துப் பேசுகிறார்.

மும்பைத் தாக்குதலைத் தொடர்ந்து இருநாடுகளுக்கும் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தைத் தணிக்க அமெரிக்க அயலுறவு அமைச்சர் காண்டலீசா ரைஸ், அந்நாட்டு இராணுவத் தலைமைத் தளபதி மைக் முல்லன் ஆகியோரைத் தொடர்ந்த தற்பொழுது ரிச்சர்ட் பெளச்சர் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments