Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மௌலானா அப்துல் அல்வியின் வீட்டுக்காவல் ரத்து

Webdunia
திங்கள், 15 டிசம்பர் 2008 (18:18 IST)
ஜமாத்-அல்-தவா அமைப்பின் முக்கிய தலைவரான மௌலானா அப்துல் அசிஸ் அல்விக்கு விதிக்கப்பட்டிருந்த வீட்டுக்காவல் தண்டனையை பாகிஸ்தான் இன்று விலக்கிக் கொண்டது.

பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட லஷ்கர்-ஈ-தயீபாவின் துணை அமைப்பான ஜமாத்-அல்-தவாவுக்கு ஐ.நா பாதுகாப்பு சபை தடைவிதித்ததைத் தொடர்ந்து அந்த அமைப்பின் மண்டலத் தலைவர்களில் ஒருவரான மௌலானா அப்துல் அசிஸ் அல்வி, கல்யாண் கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் கடந்த வியாழனன்று இரவு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

இந்நிலையில், அந்நாட்டின் டான் நாளிதழுக்கு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியின் காவல்துறை துணை ஆணையர் சௌத்ரி இம்தியாஸ் அளித்துள்ள பேட்டியில், அசிஸ் அல்வியின் வீட்டுக் காவலுக்காக நியமிக்கப்பட்ட காவலர்கள் விலக்கிக் கொள்ளப்பட்டதாக கூறினார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்ததாக கூறிய சௌத்ரி, வீட்டுக்காவல் விலக்கப்பட்டாலும் அவர் தொடர் கண்காணிப்பில் உள்ளதாகவும், அதிகாரிகளிடம் தெரிவிக்காமல் அவர் அப்பகுதியை விட்டு வெளியேறக் கூடாது என உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேபோல் முஸாஃபராபாத் அருகே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 4 பேரும் விடுவிக்கப்பட்டதாகவும் சௌத்ரி குறிப்பிட்டார். இவர்கள் நால்வரும் ஜமாத்-உல்-தவா அமைப்பைச் சேர்ந்தவர்கள்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீங்க குடிப்பீங்களா அந்த தண்ணிய..? - கெஜ்ரிவாலை சவாலுக்கு அழைக்கும் ராகுல்காந்தி!

காந்தி கொல்லப்பட்டதை ஆர்எஸ்எஸ் கொண்டாடினார்கள்: செல்வப்பெருந்தகை

மாடுகளுக்காக சென்னை மாநகராட்சி சார்பில் நவீன கொட்டகை.. மேயர் பிரியா அறிவிப்பு ..!

பெண் நீதிபதியின் 2 ஐபோன்கள் திருட்டு.. திருடனை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறல்..!

அமித்ஷா சென்னைக்கு வரும்போது கருப்பு கொடி காட்டுவோம்: தமிழக காங்கிரஸ் அறிவிப்பு..!

Show comments