Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணு ஆயுதத்தை முதலில் பிரயோகிக்க மாட்டோம்: சர்தாரி!

Webdunia
ஞாயிறு, 23 நவம்பர் 2008 (17:10 IST)
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான நம்பிக்கையை மேம்படுத்தும் விதமாக, இந்தியாவுக்கு எதிராக அணு ஆயுதத்தை பாகிஸ்தான் முதலில் பயன்படுத்தாது என அந்நாட்டு அதிபர் ஆசிப் அலி சர்தாரி தெரிவித்துள்ளார்.

தலைநகர் டெல்லியில் இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ் சார்பில் நேற்று முன்தினம் நடந்த தலைவர்கள் மாநாட்டில், இணையதள வீடியோ தொழில்நுட்ப உதவியுடன் இஸ்லாமாபாத்தில் இருந்து உரையாடிய போது அதிபர் ஜர்தாரி இதனைத் தெரிவித்தார்.

பாகிஸ்தான் தரப்பில் இருந்து அமைதியும், பாசத்தையும் வெளிப்படுத்தும் வகையிலான செய்தியை இங்கே பகிர்ந்து கொள்ள உள்ளேன். பாகிஸ்தானில் உள்ள ஒவ்வொருவரிடமும் இந்தியாவைப் பற்றிய சிறிய அக்கறையும், இந்தியர்கள் ஒவ்வொருவரிடமும் பாகிஸ்தான் பற்றிய அக்கறையும் உள்ளது.

இந்தியாவைவிட 10ல் ஒருமடங்கு அளவே உள்ள பாகிஸ்தானிற்கு, இந்தியாவால் அச்சுறுத்தல் ஏற்படும் என்று நான் கருதவில்லை. அதேபோல் பாகிஸ்தானால் எந்தவித அச்சுறுத்தலும் இந்தியாவுக்கு ஏற்படாது என்பதையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீனவர்களுக்கு அபாண்டமான அபராதம் - வரலாற்று துரோகம்..! மத்திய மாநில அரசுகளுக்கு இபிஎஸ் கண்டனம்.!

டெண்டர் முறைகேடு புகார்.! எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட 11 பேர் மீது ஊழல் வழக்குப்பதிவு.!!

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் இன்றிரவு மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

திருவள்ளுவர் பிறந்தநாள் - எந்த ஆதாரமும் இல்லை..! உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!!

பள்ளி வாகனம் பழுது ஏற்பட்டதால் பள்ளி மாணவர்களை இறங்கி வாகனத்தை தள்ளி விடச் சொன்ன தனியார் பள்ளியின் அவலம்!

Show comments