Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தோனேஷியாவில் கடும் நிலநடுக்கம்: இருவர் பலி!

Webdunia
திங்கள், 17 நவம்பர் 2008 (13:05 IST)
பாலு: இந்தோனேஷியாவின் சுலவேஷி தீவுப்பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட கடும் நிலநடுக்கம் காரணமாக 2 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரிக்டர் அளவில் 7.5 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டாலும், அடுத்த சிறிது நேரத்திலேயே அது விலக்கிக் கொள்ளப்பட்டது.

அந்நாட்டின் வன்டாங் கிராமத்தில் வீடு இடிந்ததில் 56 வயது முதியவர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்ததாகவும், அக்கிராமத்தில் மட்டும் 23 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு இடர் நிவாரண மைய அதிகாரி ருஸ்டம் பகாயா தெரிவித்துள்ளார்.

இதேபோல் மத்திய சுலவேஷி மாகாணத்தில் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்ததாக ஆளுநர் பளியுஜா கூறியுள்ளார். அப்பகுதியில் 2 பேர் காயமடைந்தனர்.

புவோல் மாவட்டத்தில் 700 வீடுகளும், சுலவேஷி தலைநகர் பலுவில் 500 வீடுகளும் சேதமடைந்துள்ளன. புவோல் மாவட்டத்தின் தொடர்புகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு உள்ளதால் சேத விவரங்கள் குறித்து முழுமையான தகவல்கள் கிடைக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments