Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேற்கு ஆசியாவில் அமைதி: ஐ.நா.விடம் இந்தியா வலியுறுத்தல்!

Webdunia
வெள்ளி, 31 அக்டோபர் 2008 (18:59 IST)
பாலஸ்தீன அகதிகளுக்கு உரிய புகழிடம் அளிப்பதுடன், மேற்கு ஆசியாவில் விரிவான அமைதி நிலவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தனது நிலையை, ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா மீண்டும் வலியுறுத்தி உள்ளது.

இதுதொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் நேற்று நடந்த விவாதத்தின் போது பேசிய இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் ராஜீவ் சுக்லா, பாலஸ்தீன அகதிகள் பிரச்சனையைத் தீர்க்க, மேற்கு ஆசியாவில் நீண்ட காலமாக நிலவி வரும் பிரச்சனைக்கு விரிவான அமைதியை நிலைநிறுத்துவதே நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும் என்றார்.

மேற்கு ஆசியாவில் நிலவும் பிரச்சனைக்கு அமைதித் தீர்வு காண உலக நாடுகளின் ஒட்டுமொத்த ஆதரவைக் கோரிய ராஜீவ் சுக்லா, பரஸ்பர அமைதி உடன்பாடு மேற்கொள்ளப்படும் வரையில், பாலஸ்தீன அகதிகளுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க ஐ.நா.வின் மீட்பு மற்றும் நிவாரணப்பணி முகமையே ஏற்றது என்று கூறிவிட முடியாது என சுட்டிக்காட்டினார்.

அதேவேளையில், ஐ.நா.வின் மீட்பு மற்றும் நிவாரணப் பணி முகமை சந்தித்து வரும் பொருளாதாரச் சிக்கல்களை களைய சர்வதேச அளவிலான நடவடிக்கை உடனடியாக தேவை என்பதையும் சுக்லா வலியுறுத்தியுள்ளார்.

மேலும், ஜோர்டான், லெபனன், சிரியா மற்றும் பாலஸ்தீனத்தின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் கடந்த பல ஆண்டுகளாக ஐ.நா.வின் மீட்பு மற்றும் நிவாரணப் பணி முகமையால் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்காக இந்தியாவின் பாராட்டுகளை அம்முகமையின் ஆணையருக்கு சுக்லா தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறுமி வன்கொடுமை, கொலை! கும்பமேளா சென்ற குற்றவாளி! சேஸ் செய்து பிடித்த போலீஸ்!

வெளிமாநிலத்தவர்கள் நிலம் வாங்க தடை.. உத்தரகாண்ட் மாநிலத்தில் புதிய சட்டம்..!

உதயநிதி சரியான ஆளாக இருந்தால் "Get Out Modi" என்று சொல்லி பார்க்கட்டும்: அண்ணாமலை

அண்ணாமலைக்கு தில் இருந்தா அண்ணாசாலைக்கு வர சொல்லுங்க! - உதயநிதி ஸ்டாலின் சவால்!

இந்தியாவில் டெஸ்லா ஆலை அமைக்க டிரம்ப் எதிர்ப்பு.. முதல் முறையாக கருத்து வேறுபாடா?

Show comments