Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனடாவில் 2 இந்தியப் பெண்மணிகள் கொலை!

Webdunia
புதன், 15 அக்டோபர் 2008 (01:55 IST)
டொராண்டோ: கனடாவில் உள்ள டொராண்டோ நகரில் வசித்து வந்த இந்திய வம்சாவழியைச் சேர்ந்த இரண்டு பெண்மணிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒரு 20 வயது இளம்பெண் காயமடைந்துள்ளார்.

கேரளாவைச் சேர்ந்த சாரம்மா வர்கீஸ் (65), இவரது மகள் சூசன் ஜான் (43) ஆகியோர் வீட்டினுள் புகுந்த அண்டை வீட்டைச்சேர்ந்த ஒருவர் தாயையையும் மகளையும் படுகொலை செய்துள்ளார். சூசன் ஜானின் மகள் சாரா ஜான் இந்த தாக்குதலில் படு காயமடைந்துள்ளார். இவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக சந்தேகத்திற்குரிய அந்த அண்டை விட்டுக்காரரான ஓ'பிரையன் என்பவரை கனடா காவல்துறை கைது செய்துள்ளது.

கொலைக்கான தெளிவான் காரணங்கள் இன்னமும் தெரியவில்லை. ஆனால் களவு முயற்சியில் ஏற்பட்ட தோல்வி கொலையில் முடிந்திருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

இவர் கொலை செய்யப்பட்ட சாரம்மா வர்கீஸின் அண்டை வீட்டில் குடியிருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. எப்படி கொலை செய்யப்பட்டனர் என்ற விவரத்தை காவல் துறை தெரிவிக்கவில்லை. ஆனால் கொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து கத்தி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது.

பிரேதப் பரிசோதனை புதன் கிழமையான இன்று நடைபெறுகிறது. இந்த இரட்டைக் கொலை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

Show comments