Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வவுனியாவில் மோதல் : 4 படையினர் பலி!

Webdunia
ஞாயிறு, 8 ஜூன் 2008 (13:03 IST)
இலங்கையின் வவுனியாவில் உள்ள குஞ்சுக்குளம் எனும் பகுதியில் சிறிலங்கப் படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நே‌ற்று நடந்த மோதலில் சிறிலங்க படையினர் 4 பேர் கொல்லப்பட்டனர். 7 பேர் காயமடைந்துள்ளனர்.

இத்தகவலை தமிழீழ விடுதலைப் புலிகளின் ராணுவப் பேச்சாளர் ராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வவுனியாவின் வடமேற்கு குஞ்சுக்குளம் பகுதியில் சிறிலங்கப் படையினர் மும்முனைகளில் முன்னேறியதாகவும், இதனை எதிர்த்து விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்குதலில் படையினர் பின்வாங்கி சென்றுவிட்டதாகவும் இளந்திரையன் கூறியுள்ளார்.

இம்மோதலின் போது சிறிலங்க படையினர் 4 பேர் கொல்லப்பட்டனர் என்றும், 7 பேர் காயமடைந்தனர் என்றும் இளந்திரையன் தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

Show comments