Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாக்தாத்தில் குண்டு வெடித்து 18 பேர் பலி

Webdunia
வியாழன், 5 ஜூன் 2008 (12:36 IST)
பாக்தாத் நகரில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் 18 பேர் பலியானதாக அஞ்சப்படுகிறது.

பாக்தாத் நகரில் நேற்று மாலை தற்கொலை படை தாக்குதல் நட‌த்த‌ப்ப‌ட்டது. அங்குள்ள உயர் காவல்துறை அதிகாரி ஒருவரின் வீட்டைக் குறி வைத்து நட‌த்த‌ப்ப‌ட்ட இ‌ந்த தா‌க்குத‌லி‌ல், வெடிபொருட்கள் நிறைந்த லாரி ஒன்று ‌வீ‌ட்டி‌ன் அருகே வெடிக்கச் செய்யப்பட்டது.

இதில் சம்பவ இடத்திலேயெ 15 பேர் உடல் சிதறி பலியானார்கள். மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதில் அந்த உயர் காவலதிகாரி உ‌யி‌ர் த‌ப்‌பினா‌ர். ஆனால் அவரது நெருங்கிய உறவினர் பலியானார். அவரது வீடு இடிந்து தரைமட்டமானது.

ஈராக்கில் காவல்துறை மற்றும் அமெரிக்க ராணுவத்தினர் மீது தீவிரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தி வருவது அதிகரித்து வருகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் வழங்காமல் இறுமாப்புடன் தட்டிக் கழிப்பதா.? திமுக அரசுக்கு சீமான் கண்டனம்..!

விஜயின் அரசியல் செயல்பாடு எப்படி இருக்கும்.? திராவிட மாடலில் கிக் தான் முக்கியம்.! வானதி சீனிவாசன்..!!

இந்திய அணிக்கு நாடாளுமன்றத்தில் வாழ்த்து..! இந்தியா- இந்தியா என முழக்கமிட்ட எம்பிக்கள்..!!

டெட்ரா பாக்கெட்டுகளில் 90 மி.லி. மது விற்க திட்டமா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்..!

செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் புதிதாக 3 மனுக்கள் தாக்கல்.. என்ன கோரிக்கை?

Show comments