Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாக். குண்டுவெடிப்பில் 3 பேர் பலி!

Webdunia
சனி, 24 மே 2008 (14:44 IST)
பாகிஸ்தான் வடமேற்குப் பகுதியில் ஏற்பட்ட இரண்டு குண்டு வெடிப்புத் தாக்குதல்களில் 2 காவலர்கள் உட்பட 3 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 6 பேர் காயமடைந்தனர்.

வடமேற்கு எல்லை மாகாணமானத் தலைநகரான பெஷாவரில் காவலர்கள் தங்கள் வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது ரிமோட் கன்ட்ரோல் மூலம் குண்டு வெடிக்கச்செய்யப்பட்டதில் இரண்டு காவலர்கள் கொல்லப்பட்டனர். வாகனம் முழுதும் சேதமடைந்தது.

இந்த குண்டுவெடிப்பில் காயமடைந்த 3 பேர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர் இந்த மூவரின் உடல் நிலை கவலைக்கிடம் என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மற்றொரு குண்டுவெடிப்பு பாகிஸ்தா‌ன்- ஆப்கான் எல்லைப் பகுதியில் நடந்துள்ளது. பழங்குடியினர் பகுதியான பராவில் உள்ள மருத்துவமனை அருகே கார் குண்டு வெடித்தது இதில் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் 3 பேர் காயமடைந்தனர்.

இந்த இரண்டு குண்டுவெடிப்புகளுக்கும் எந்த தீவிரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

Show comments