Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏழை நாடுகளின் உணவு இறக்குமதி செலவுகள் 40% அதிகரிக்கும்!

Webdunia
வெள்ளி, 23 மே 2008 (16:47 IST)
உணவு தா‌னிய‌த் தேவை‌க்கு இறக்குமதியை பெருமளவு நம்பியிருக்கும் ஏழை நாடுகள் இந்த ஆண்டில் இறக்குமதிக்காக 40 விழுக்காடு கூடுதலாக செலவு செய்ய வேண்டி வரும் என்று ஐ.நா. உணவு மற்றும் வேளாண் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஐ.நா. உணவு மற்றும் வேளாண் அமைப்பின் 'ஃபுட் அவுட்லுக்' என்ற வெளியீட்டில், குறைந்த வருமான உணவு தா‌னிய இறக்குமதி நாடுகள் இந்த ஆண்டில் இறக்குமதி செய்யும் உணவுப் பொருட்கள் 169 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது.

மிகவும் கவலையளிக்கும் ஒரு நிலை என்று இதனை வர்ணிக்கும் உணவு மற்றும் வேளாண் அமைப்பு, உணவு இறக்குமதிக்காக ஏழை நாடுகள் செலவு செய்யு‌ம் தொகை 2008ல் 4 மடங்கு அதிகரிக்கும் என்று கூறியுள்ளது.

உணவு என்பது ஒரு காலத்தில் இருந்தது போல் தற்போது மலிவான பொருள் அல்ல என்று கூறுகிறார் ஐ.நா. உணவு மற்றும் வேளாண் அமைப்பின் உதவி தலைமை இயக்குனர் ஹஃபீஸ் கானெம். மேலும் பசியால் வாடுபவர்கள் எண்ணிக்கை உணவுப் பொருட்களின் தற்போதைய வானளாவிய விலையால் மேலும் அதிகரிக்கும் என்று அவர் எச்சரிக்கை செய்துள்ளார்.

உணவு தானியப் பொருட்களின் உற்பத்தி அதிகரித்திருந்தாலும், சந்தைகளில் நிலவும் போக்குகளால் விலை குறைவதற்கு இப்போதைக்கு வாய்ப்புகள் மங்கலாகவே உள்ளது என்று அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

Show comments