Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய மாணவர்கள் கொலை தொடர்பாக 3 பேர் கைது!

Webdunia
வெள்ளி, 23 மே 2008 (11:17 IST)
அமெரிக்காவில் உள்ள லூஸியானா மாகாண பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த டிசம்பர் மாதம் ஆந்திராவைச் சேர்ந்த 2 மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக 3 ஆப்பிரிக்க- அமெரிக்க இளைஞர்களை காவல்துறை கைது செய்துள்ளது.

சந்திரசேகர ரெட்டி கொம்மா, கிரண்குமார் அல்லம் ஆகியோர் டிசம்பர் மாதம் 13ஆம் தேதி பல்கலைக்கழக வளாக‌த்தில் சுட்டுக் கொல்லப்பட்டனர். பரபரப்பான இந்த கொலையில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க எஃப்.பி.ஐ. உள்ளிட்ட சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்பட்டது. இந்த கொலைகளை செய்ததாக கருதப்படும் இரண்டு ஆப்பிரிக்க- அமெரிக்கர்களின் படங்களை இந்த விசாரணைப் படை வெளியிட்டது.

இந்நிலையில் மைக்கேல் ஜெர்மைன் லூயிஸ், கேஸி கேதர்ஸ் என்ற இரண்டு இளைஞர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். கொலையில் தொடர்பிருப்பதாக சந்தேகிக்கப்படும் மற்றொரு நபரான டெவின் ஜாமெல் பார்க்கரை புதனன்று காவல்துறை கைது செய்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்களவையை தெறிக்கவிட்ட ராகுல்.! அனல் பறக்கும் விவாதம்..! 2 முறை குறுக்கிட்ட பிரதமர் மோடி.!!

ஆக்கும் சக்தி கடவுள் என்றால் காக்கும் சக்தி மருத்துவர்கள் தான்: அன்புமணியின் மருத்துவர் தின வாழ்த்து..!

வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா கட்டணம் இரு மடங்கு உயர்வு: ஆஸ்திரேலியா அதிர்ச்சி அறிவிப்பு..!

சாலையில் அசால்ட்டாக வலம் வந்த 8 அடி நீள முதலை; வாகன ஓட்டிகள் அதிர்ச்சி..!

மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் வழங்காமல் இறுமாப்புடன் தட்டிக் கழிப்பதா.? திமுக அரசுக்கு சீமான் கண்டனம்..!

Show comments