Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரண்மனையை காலி செய்ய மன்னருக்கு இறுதி கெடு!

Webdunia
புதன், 14 மே 2008 (12:03 IST)
நேபாள மன்னர் ஞானேந்திரா வரும் 27ஆம் தேதிக்குள் அரண்மனையை காலி செய்யாவிட்டால், அவரை வெளியேற்றப்போவதாக மாவோயிஸ்ட் தலைவர் பிரசந்தா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதாவது மே 28ஆம் தேதி நேபாளம் தனது 240 ஆண்டுகால முடியாட்சியை முடிவுக்கு கொண்டு குடியரசு நாடாக தன்னை அறிவிக்கவுள்ளது. அன்றைய தினத்திற்கு முதல் நாள் அரண்மனையை மன்னர் காலி செய்யவேண்டும் என்று பிரசந்தா மன்னருக்கு தகவல் அனுப்பியுள்ளதாக நேபாள் இணையதள செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் மன்னர் அரசியல் நடைமுறைகளுக்கு ஒத்துழைப்பு அளித்தால் சாதாரண குடிமகன்களுக்கு கிடைக்கும் உரிமைகள் வழங்கப்படும் என்றார் பிரசந்தா.

ஆனால் மன்னர் இந்த எச்சரிக்கைகளைக் கண்டு அஞ்சவில்லை என்றும் அவர் முன்பை விடவும் தன்னம்பிக்கையுடன் இருப்பதாக மன்னராட்சியில் அமைச்சராக இருந்தவரும் ராஷ்ட்ரிய பிரஜதந்திரா கட்சியின் தலைவருமான கமல் தாபா கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்களவையை தெறிக்கவிட்ட ராகுல்.! அனல் பறக்கும் விவாதம்..! 2 முறை குறுக்கிட்ட பிரதமர் மோடி.!!

ஆக்கும் சக்தி கடவுள் என்றால் காக்கும் சக்தி மருத்துவர்கள் தான்: அன்புமணியின் மருத்துவர் தின வாழ்த்து..!

வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா கட்டணம் இரு மடங்கு உயர்வு: ஆஸ்திரேலியா அதிர்ச்சி அறிவிப்பு..!

சாலையில் அசால்ட்டாக வலம் வந்த 8 அடி நீள முதலை; வாகன ஓட்டிகள் அதிர்ச்சி..!

மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் வழங்காமல் இறுமாப்புடன் தட்டிக் கழிப்பதா.? திமுக அரசுக்கு சீமான் கண்டனம்..!

Show comments