Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென் ஆப்பிரிக்காவில் இந்தியர் கொலை!

Webdunia
வியாழன், 17 ஏப்ரல் 2008 (15:23 IST)
தென் ஆப்பிரிக்காவில் வாழ்ந்து வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 76 வயது முதியவர் ஒருவர் கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டார்.

ஃபீனிக்ஸ் என்ற புற நகர்ப் பகுதியில் தனது வீட்டில் தனியாக இருந்த நாராயணசாமி நாயக்கரை, வீட்டிற்குள் நுழைந்த திருடன் கழுத்தை நெரித்துக் கொலைசெய்து விட்டு பிணத்தை கழிவறையில் வைத்து பூட்டிச் சென்றதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அலுவலகப் பணி முடிந்து மாலை வீடு திரும்பிய அவரது மகள் ராணி பெருமாள் கழிவறையில் தந்தை கொலை செய்யப்பட்டு கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இந்த மாதத் துவக்கத்தில் இதே பகுதியில் ஹரே கிருஷ்ணா இயக்கத்தை சேர்ந்த ஷெரிதா தேவிப் பிரசாத் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

இது நடந்து சில தினங்களில் கெல்வின் கிளாட் நாயுடு என்ற இந்தியரும் இத ே பகுதியில ் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

தற்போது நாராயணசாமி நாயக்கரின் கொலையுடன் குறுகிய கால இடைவெளியில் 3ஆவது இந்தியர் கொல்லப்பட்டுள்ளதால் அங்கு வசிக்கும் இந்தியர்கள் பெரும ் அச்சத்திற்கு உள்ளாகியிருப்பதா க அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி முதல் டாஸ்மாக் கடைகளில் ‘கட்டிங்? டாஸ்மாக் நிர்வாகம் திட்டமா?

மோடியை போன்று ஸ்டாலினும் எதிர்க்கப்பட வேண்டியவரே..! சீமான் காட்டம்..!!

இன்று முதல் 7 நாட்களுக்கு தமிழகத்தில் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கள்ளக்குறிச்சி விஷச்சாராயத்தில் 29.7% மெத்தனால் கலப்பு.! தமிழக அரசு அறிக்கை..!!

தேர்தல் விதிமீறல்.! திமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்க.! அன்புமணி ஆவேசம்..!

Show comments