Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன ஒடுக்கலா? பொய் என்கிறார் மலேசிய பிரதமர்!

Webdunia
ஞாயிறு, 2 டிசம்பர் 2007 (18:35 IST)
தங்களை இன ரீதியாக மலேசிய அரசு ஒடுக்கி வருகிறது என்கின்ற குற்றச்சாற்று தங்களது நாட்டை இன ரீதியாக பிளவுபடுத்தும் நோக்கம் கொண்டது என்று மலேசிய பிரதமர் அப்துல்லா பதாவி கூறியுள்ளார்.

மலேசிய அரசால் இந்திய வம்சாவழியினர் ஓரங்கங்கட்டப்படுவதாக ஹின்ட்ராஃப் கூறிடும் குற்றச்சாற்று பொய் என்று நியூ ஸ்ட்ரெய்ட் டைம்ஸ் என்ற நாளிதழிற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ள அப்துல்லா பதாவி, இந்திய வம்சாவழியினரின் குற்றச்சாற்று தன்னை மிகவும் கோவப்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

“மலேசிய இந்தியர்கள் ஓரங்கட்டப்படுவதாக நிரூபிக்கட்டும், நான் பதவி விலகுகிறேன ் ” என்றும் பதாவி கூறியுள்ளார்.

மலேசியாவில் இன ஒடுக்கல் நடந்துவருவதாக ஐ.நா. சபையில் ஒரு அவசர தீர்மானத்தை இங்கிலாந்து கொண்டுவரவேண்டும் என்பதற்காகவே ஹின்ட்ராஃப் இப்படிப்பட்ட குற்றச்சாற்றை கூறுவதாகவும் பிரதமர் பதாவி குற்றம் சாற்றியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments