Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துபாயில் பாலம் இடிந்து விழுந்து 7 இந்தியர்கள் பலி!

Webdunia
வெள்ளி, 9 நவம்பர் 2007 (15:58 IST)
துபாயில் பாலம் கட்டுமானப் பணியின் போது திடீரென்று அந்தப் பாலம் இடிந்து விழுந்ததில் 7 பேர் கொல்லப்பட்டனர். 24க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்!

துபாய் அருகே துபாய் மெரீனா என்ற புதிய நகரம் நவீனமயமாக உருவாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அங்குள்ள சஃபோசாலையில் பாலம் ஒன்று கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் 40 பேரும் இந்தியர்கள். நேற்று மாலை அந்தப் பாலத்தின் சில பகுதிகள் திடீரென்று விழுந்து நொறுங்கியதால் 7 பேர் சம்பவ இடத்திலேயே நசுங்கி பலியானார்கள். இந்த போர விபத்தில் படுகாயமடைந்த 24 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த இந்திய தூதரக அதிகாரிகள், சம்பவ இடத்தையும் பார்வையிட்டனர்.

விரைவில் முழு விவரத்துடன்...
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments