பலாலி முகாம் மீது புலிகள் தாக்குதல்

Webdunia
செவ்வாய், 21 ஆகஸ்ட் 2007 (12:35 IST)
யாழ்பாணத்தில் சிறிலங்க ராணுவம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பலாலி முகாம்கள் மீது விடுதலைப் புலிகள் பீரங்கி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இன்று காலை 8.45 மணியளவில் நீண்ட தூர பீரங்கிகளைக் கொண்டு தாக்குதல் நடத்தினர் என்றும், பீரங்கி குண்டுகள் பலாலி முகாமிற்குள் வந்து விழுந்ததாகவும் கூறியுள்ள சிறிலங்க பாதுகாப்பு அதிகாரி, அதற்கு பதலடி கொடுத்து சிறிலங்க ராணுவத்தினரும் பீரங்கிகளை கொண்டும், பல்குழல் ராக்கெட்டுகளைக் கொண்டும் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளார்.

தற்பொழுது சண்டை நின்று அமைதி நிலவுகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்ததாக செய்திகள் கூறுகின்றன.

பலாலி மட்டுமின்றி, யாழ்குடா நாட்டில் உள்ள காங்கேசன் துறைமுகத்தின் மீதும் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதாக புதினம்.காம் செய்தி வெளியிட்டுள்ளது.

அதிகாலை 2 மணி முதல் நடந்த இத்தாக்குதலில் 130 மி.மீ. பீரங்கிகளைக் கைப்பற்றி எரிகணை தாக்குதல்களை விடுதலைப் புலிகள் நடத்தியதாக புதினம் செய்தி கூறுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏலியன்ஸ் இருப்பது உண்மையா?.. கண்டுபிடிச்சது என்ன?.. அமெரிக்கா எல்லாத்தையும் சொல்லப்போறாங்களாம்!..

2026 சட்டமன்ற தேர்தல்!. சொந்த தொகுதியில் களமிறங்கும் சீமான்!.. அரசியல் பரபர!...

இனி ஒவ்வொரு வருஷமும் 2 ஆயிரம் சிறப்பு தொகை!.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு...

வடிவேலுவுக்கு விபூதி அடிச்ச திமுக!.. பண்ண பர்ஃபாமென்ஸ் எல்லாம் வீணாப்போச்சே!...

அமெரிக்காவுடன் போர்!.. ரஷ்யாவுடன் சேர்ந்து கடற்பயிற்சி செய்யும் ஈரான்!.. எல்லையில் பதற்றம்!..

Show comments