Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நவாஷ் ஷெரீப் பாகிஸ்தான் திரும்ப நீதிமன்றம் உத்தரவு

Webdunia
வியாழன், 9 ஆகஸ்ட் 2007 (17:57 IST)
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஷ் ஷெரீப் நாடு திரும்ப அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தானில் கடந்த 1999 ஆம் ஆண்டு நவாஷ் ஷெரீப் ஆட்சியை கவிழ்த்து விட்டு ராணுவ தளபதி முஷாரப் அதிபர் ஆனார். அதைத்தொடர்ந்து, நவாஷ் ஷெரீப் அவரது தம்பி ஷாபஸ் ஷெரீப் ஆகியோர் நாடு கடத்தப்பட்டனர். அவர்கள் சவூதி அரேபியாவில் அடைக்கலம் புகுந்தனர்.

தற்போது பாகிஸ்தானில் அதிபர் தேர்தல் நடக்க உள்ளதால் நவாஷ் ஷெரீப் நாடு திரும்ப முடிவு செய்தார். இதற்காக உச்ச நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. நவாஷ் ஷெரீப்பும், அவரது தம்பியும் நாடு திரும்பலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், நவாஷ் ஷெரீப் நாடு திரும்புவதை தடுக்க அரசுக்கு உரிமை இல்லை என்று அரசுக்கு தாக்கீது அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எம்ஜிஎம் கேன்சர் இன்ஸ்டிடியூட் நடத்திய புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்வு! - 500-க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்பு!

திருமா அண்ணன்கிட்ட கத்துக்கிட்ட விஷயத்தை விஜய் கட்சியில் செய்வேன்! - ஆதவ் அர்ஜூனா பேட்டி!

இந்த மாதம் சிலிண்டர் விலை குறைப்பு! விலை நிலவரம் எவ்வளவு?

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

Show comments