பாகிஸ்தானில் தீவிரவாதிகள் தாக்குதல்: 21 பேர் பலி

Webdunia
சனி, 4 ஆகஸ்ட் 2007 (18:51 IST)
பாகிஸ்தானில் இருவேறு இடங்களில் தீவிரவாதிகள் இன்று தாக்குதல் நடத்தியதில் பாதுகாப்பு படை வீரர்கள் 4 பேர் உள்பட 21 பேர் கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தானின் வடக்குப் பகுதியில் உள்ள வாஷிரிஸ்தான் பகுதி அருகே இராணுவ சோதனைச் சாவடி உள்ளது. இந்த சோதனை சாவடி மீது இன்று தாலிபான் ஆதரவு தீவிரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர்.

அப்போது, தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே நடந்த பயங்கர சண்டையில் 10 தாலிபான் தீவிரவாதிகளும், 4 பாகிஸ்தான் வீரர்களும் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் பாதுகாப்பு செய்தி தொடர்பாளர் வாஹீத் அர்சாத் தெரிவித்தார்.

இதேபோல், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பரசினார் பகுதியில் உள்ள சந்தையில் பயங்கர சத்தத்திடன் கார் குண்டு வெடித்தது. இதில் அங்கிருந்த அப்பாவி பொது மக்கள் 7 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.

37 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக் கிடமாக இருப்பதாக பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி! அடுத்த 24 மணி நேரத்தில் என்ன நடக்கும்?

தனிக்குடித்தனம் செல்லும் தம்பதிகளுக்கு கான்கிரீட் வீடு கட்டி தரப்படும்: ஈபிஎஸ் வாக்குறுதி..!

திமுக கூட்டணிக்கு போகும் ஓபிஎஸ், டிடிவி?!.. சூடுபிடிக்கும் அரசியல் களம்!...

மது வாங்கும்போது 10 ரூபாய் அதிகம் செலுத்த வேண்டும்.. காலி பாட்டிலை கொடுத்து அந்த 10 ரூபாயை திரும்ப பெறலாம்: டாஸ்மாக்

சகோதரி மம்தாவுக்கு வாழ்த்துக்கள்.. பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் பதிவுகள்..!

Show comments