பாக்தாத்தில் கார் குண்டு வெடிப்பு 17 பேர் பலி

Webdunia
புதன், 1 ஆகஸ்ட் 2007 (18:15 IST)
பாக்தாத்தின் மையப்பகுதியில் இன்று காலை நடந்த கார் குண்டு வெடிப்பில் 17 பேர் கொல்லப்பட்டனர். 32 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

பாக்தாத்தின் மையப்பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் குண்டு இன்று காலை சுமார் 10.15 மணி அளவில் பயங்கர சத்ததுடன் வெடித்தது.

இதில் அருகில் இருந்த மூன்று சிறிய பேருந்துகள், 6 கார் தீப்பிடித்து எரிந்தது. குண்டு வெடிப்பு பகுதியில் இருந்த பொது மக்கள் 17 பேர் உடல் சிதறி பரிபாதமாக உயிரிழந்தனர். மேலும் 32 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

கார் குண்டு வெடிப்பு அருகே பெட்ரோல் நிலையம் ஒன்று இருந்ததாகவும், அதிர்ஷ்டவசமாக தீ அங்கு பரவாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாகவும் விபத்து நடந்த பகுதியில் இருந்த ஒருவர் தெரிவித்தார்.

பாக்தாத்தின் மையப்பகுதியில் உள்ள சபெஸ்ட் பகுதியில் கடந்த 26 ஆம் தேதி நடந்த குண்டு வெடிப்பில் 60 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டது குறிப்பிடதக்கதாகும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் முடித்துவிட்டு சென்னை திரும்ப சிறப்பு ரயில்!.. ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!...

ஈரானை தாக்கினால் கடும் விளைவு!.. அமெரிக்காவுக்கு வார்னிங் கொடுத்த ரஷ்ய அதிபர்...

கரூரில் நடந்த சதி!. சிபிஐ விசாரணையில் சொன்ன விஜய்!... டெல்லியில் நடந்தது என்ன?...

இது சும்மா டீசர்தான்!.. மெயின் பிக்சர் இருக்கு!.. விஜய்க்கு செக் வைக்கும் டெல்லி வட்டாரம்!...

நாய்கள் இல்லா கிராமம் என தேர்தல் வாக்குறுதி.. 500 நாய்களை கொன்ற 7 கிராம தலைவர்கள் மீது வழக்குப்பதிவு..!

Show comments