Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானில் லால் மசூதி அருகே குண்டு வெடிப்பு : 12 பேர் பலி

Webdunia
சனி, 28 ஜூலை 2007 (11:59 IST)
பாகிஸ்தானில் லால் மசூதி அருகே சக்தி வாய்ந்த குண்டு வெடித்தலில் 12 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 40 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள புகழ் பெற்ற லால் மசூதியை தீவிரவாதிகளிடம் இருந்து ராணுவம் கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து மசூதியையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

லால் மசூதியை ராணுவம் கைப்பற்றியதை அடுத்து பாகிஸ்தானில் தொடர்ந்து தற்கொலை படைத் தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நேற்று மாலை லால் மசூதி அருகே உள்ள முசாபர்கார் என்ற ஓட்டல் அருகே பயங்கர குண்டு வெடித்தது.

இதில் அந்த இடத்திலேயே 4 காவலர்கள் உள்பட 12 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 40 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் அனைவரும் சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

Show comments