Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரேசில் விமான விபத்து : 200 பேர் பலி

Webdunia
புதன், 18 ஜூலை 2007 (11:35 IST)
பிரேசில் நாட்டில் சாபாலோ நகர விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் ஓடு பாதையில் இருந்து விலகி கட்டடத்தில் மோதி விபத்திற்குள்ளானதில் 200 பலியாகியுள்ளனர்.

டெம் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஏர்பஸ் 320 என்ற விமானம் 170 பயணிகளுடன் சாபாலோ நகர விமான நிலையத்தில் நேற்றிரவு தரையிறங்கியது.

அங்கு பெய்த மழையின் காரணமாக ஓடுதளம் ஈரமாக இருந்தது. இதனால் விமானம் தரையிறங்கி ஓடுபாதையில் சென்று கொண்டிருந்த போது திடீரென வழுக்கி தாறுமாறாக ஓடியது.

விமான நிலைய தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு அந்த விமானம் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இருந்த கட்டடத்திற்குள் புகுந்தது. விமானத்தின் பெரும் பகுதி அந்த கட்டடத்திற்குள் புகுந்ததால் விமானம் தீப்பிடித்து எரிந்தது.

தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து நீண்ட நேரம் போராடி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் சிறிது நேரத்தில் விமானத்தின் பெரும்பாலான பகுதிகள் எரிந்து விட்டன. இதில் விமானத்தில் இருந்த பயணிகள், கட்டடத்தில் இருந்தவர்கள் உள்பட 200 பேர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments