Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கைது

Webdunia
திங்கள், 16 ஜூலை 2007 (12:50 IST)
வங்கதேசத்தின் பிரதமராக இருந்தபோது வணிக நிறுவனம் ஒன்றை பணம் கேட்டு மிரட்டியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் அந்நாட்டு முன்னாள் பிரதமரும், அவாமி லீக் கட்சியின் தலைவருமான ஷேக் ஹசீனா கைது செய்யப்பட்டுள்ளார்.

1996 முதல் 2009ஆம் ஆண்டு வரை பிரதமராக இருந்தபோது 3 வணிக நிறுவனங்களை பணம் கேட்டு மிரட்டியதாக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையிலும், தற்பொழுதுள்ள அரசின் தலைமை ஆலோசகர் ·பக்ருதின் அகமது அரசியல் ரீதியாக நடந்த கொலையில் ஷேக் ஹசீனாவிற்கு தொடர்புள்ளது என்று அளித்த புகாரின் அடிப்படையிலும் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று அதிகாலை 4 மணியளவில் 300 முதல் 400 காவலர்களைக் கொண்ட படை ஷேக் ஹசீனாவின் இல்லத்தை சுற்றிவளைத்து, பின் அவரை கைது செய்ததாகவும், அவரை டாக்கா குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றதாகவும் செய்திகள் கூறுகின்றன.

( யு.என்.ஐ.)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் ஆபத்தானது.! இந்தியாவிற்கு தேவைப்படாது - கமல்..!!

சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தை மாணவர்களுடன் இணைந்து துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தூய்மைப் பணியை மேற்கொண்டார்!

சென்னை கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில் சேவை நாளை ரத்து.. என்ன காரணம்?

மக்கள் நீதி மய்யம் நிரந்தர தலைவராக கமல்ஹாசன் தேர்வு.. பொதுக்குழுவில் தீர்மானம்..!

சட்டப் பல்கலை பட்டமளிப்பு விழா தேதி அறிவிப்பு.. முன்பதிவு செய்ய வேண்டிய இணையதளம்..!

Show comments