Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர் கிரீக் : இந்தியா-பாகிஸ்தான் நாளை பேச்சுவார்த்தை!

Webdunia
குஜராத் மாநிலத்தின் கட்ச் வளைகுடாப் பகுதியை ஒட்டியுள்ள கடற்பகுதியில் அமைந்துள்ள சர் கிரீக் தீவுத் தொடர்கள் யாருக்குச் சொந்தம் என்பது குறித்து இந்திய-பாகிஸ்தான் அதிகாரிகள் நாளை இலாமாபாத்தில் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்!

இந்திய நில அளவைத் துறையின் தலைவர் இந்திய ராணுவத்தின் துணைத் தளபதி மேஜர் ஜென்ரல் கோபால் ராவ் தலைமையிலான இந்தியக் குழு இன்று ராவல்பிண்டிக்கு வந்துள்ளது.

இக்குழு நாளை பாகிஸ்தான் பாதுகாப்புத் துறையின் கூடுதல் செயலரும் கடற்படைத் துணைத் தளபதியுமான தன்வீர் ஃபை தலைமையிலான குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தும்.

சர் கிரீக் தீவுத் தொடர்களை கடந்த ஜனவரியில் இந்திய- பாகிஸ்தான் நில அளவைத் துறையின் அதிகாரிகளும் இரு நாடுகளின் பாதுகாப்புத் துறை அதிகாரிகளும் ஒன்றாக நில அளவை செய்தனர். அதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வரைபடங்களை அடிப்படையாகக் கொண்டு நாளை இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. (யு.என்.ஐ.)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

Show comments