Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுற்றுச்சூழல் பாதுகாப்பு : திருப்பதி மலையில் புதிய கட்டடங்களுக்கு தடை

Webdunia
திங்கள், 15 ஜூன் 2009 (15:08 IST)
திருப்பதியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் புதிய கட்டடங்கள் கட்ட தடை விதிக்கப்படுவதாக ஆந்திர முதல்வர் ராஜசேகரரெட்டி தெரிவித்துள்ளார்.

திருப்பதி திருமலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள 2 தங்கும் விடுதிகளை முதல்வர் ராஜசேகர ரெட்டி நேற்று திறந்துவைத்தார். ரூ.44 கோடி செலவில் புதிதாக கட்டப்படவுள்ள விடுதிகளுக்க ும ் அவர் அடிக்கல் நாட்டினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திருப்பதியில் தற்போதுள்ள விடுதிகளில் சுமார் 60 ஆயிரம் பேர் வரை தங ்கும ் வசதி உள்ளது. திருப்பதி மலையில் புதிது புதிதாக நிறைய கட்டடங்கள் கட்டுவதால் மலையின் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுகிறது. எனவே, புதிய கட்டடங்கள் கட்ட தடை விதிக்க உத்தரவு பிறப்பித்துள்ளேன்.

திருப்பதியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மலைகளின் இயற்கை அழகை மேம்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கபட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உறுதி.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.! செல்வப்பெருந்தகையை நீக்குக.! ராகுல் காந்திக்கு BSP கடிதம்..!

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

Show comments