புதனன்று ஐதராபாத் உடனான அந்த ரஞ்சி போட்டியின் இறுதி நாள், இந்த ஆண்ட ு ஜம்மு அணி சிறப்பாக ஆடி வருகிறது. மறுநாள் ஆட்டத்திற்கான கடுமையான ஆயத்தங்களைச் செய்துவிட்டு வீரர்கள் விடுதியில் நன்றாக உறங்கிவிட்டனர்.
அப்போது திடீரென ஆயுதங்களுடன் போலீஸ் கும்பல் வீரர்கள் தங்கியிருக்கும் விடுதி அறைக்குள் புகுந்து அடையாள அட்டையை எடு, அது இது என்று ஆயிரத்தெட்டு கேள்விகளைக் கேட்டு அவர்களை ஏதோ பயங்கரவாதிகளைப் போல் விசாரணை செய்துள்ளது ஜம்மு போலீஸ்.
இது குறித்து ஜம்மு காஷ்மீர் அணி வீரர் சமியுல்லா பெய்க் தனது ஃபேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது: " இரவு முழுதும் தூங்கமுடியவில்லை. நடு இரவில் போலீஸ் எங்கள் அறைக்கு வந்து சோதனை நடத்தினர். நடு ராத்திரி சுமார் 1.15 மணிக்கு வந்த போலீஸ் சுமார் ஒன்றரை மணி நேரம் கேள்வி மேல் கேட்டு எங்கள் அறையை புரட்டிப் போட்டுவிட்டுச் சென்றது.
நாங்கள் அறையை தாழிடவில்லை. நாங்கள் ரஞ்சி கிரிக்கெட் வீரர்கள்தானே. ஆனாலும் நடு ராத்திரியில் திபு திபுவென ஆயுததாரிகளாக போலீஸ் அறைக்குள் நுழைந்தது இப்போதும் குலை நடுங்குகிறது" என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
ரஞ்சி காலிறுதிக்குள் முதன் முதலாக நுழைந்து வரலாறு படைக்கும் முயற்சியுடன் ஜம்மு காஷ்மீர் அணி விளையாடி வருகிறது.
யார் எங்கு தங்கியிருக்கிறார்கள் என்பது ஜம்மு போலீசுக்கு தெரியாதா என்ன? இதுபோன்ற ஒரு கேவலமான ரெய்டை நடத்திவிட்டு பதில் கேட்டால்
ஜம்மு ஐ.ஜி.ராஜேஷ்குமார் கூறுவது கேவலத்தின் உச்சக்கட்டம்: