Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாலர் மதிப்பு 4 பைசா உயர்வு!

Webdunia
செவ்வாய், 6 மே 2008 (12:50 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் இன்று காலை டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 4 பைசா குறைந்து.

காலையில் வர்த்தகம் ஆரம்பித்த போது 1 டாலர் ரூ.40.65 / 40.66 என்ற அளவில் இருந்தது. இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட, 4 பைசா குறைவு. நேற்றைய இறுதி விலை 1 டாலர் ரூ.40.61.

பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை 1 பீப்பாய் 120 டாலராக நேற்று அதிகரித்தது. பெட்ரோலிய நிறுவனங்களும் சில அந்நிய நாட்டு வங்கிகளும் டாலரை வாங்குதில் ஆர்வம் காண்பித்தன.

அத்துடன் இன்று பங்கு சந்தைகளும் இறங்குமுகமாக இருப்பதால் டாலரின் மதிப்பு அதிகரித்தது. அத்துடன் இந்தியாவின் அந்நிய நாடுகளுடான வர்த்தகத்தில் ஏற்றுமதி குறைந்து, இறக்குமதி அதிக அளவு அதிகரித்துள்ளதும் இந்திய ரூபாய் மதிப்பு குறைவதற்கு காரணம் என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வர்த்தகம் நடக்கும் போது 1 டாலர் ரூ.40.65 முதல் ரூ.40.72 என்ற அளவில் இருந்தது. கடந்த எட்டு மாதங்களில் இன்று தான் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு அதிக அளவு குறைந்துள்ளது. மேலும் ரூபாயின் மதிப்பு 1 டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.40.84 என்ற அளவிற்கு குறையலாம் என்று வர்த்தகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 ஆண்டுகள் செயல்பட்ட வந்த குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்: வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடி..!

திரைக்கு வர இருந்த கவுண்டம்பாளையம் படம் திரையிடபடாது ஒத்திவைப்பதாகவும் இது தொடர்பாக முதல்வரையும், செய்திதுறை அமைச்சரையும் சந்தித்து படம் வெளியிட ஆதரவு கேட்பேன்- இயக்குனரும் நடிகருமான ரஞ்சித்!

கள்ள உறவை கைவிட மறுத்த மனைவி! ஆத்திரத்தில் அடித்துக் கொன்ற கணவன்!

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆதரவாளர் வீடுகளில் சிபிசிஐடி சோதனை.. பரபரப்பு தகவல்..!

தொடர் ஏற்றத்திற்கு பின் பங்குச்சந்தையில் திடீர் வீழ்ச்சி.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

Show comments