Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாலர் மதிப்பு 4 பைசா குறைந்தது

Webdunia
புதன், 30 ஏப்ரல் 2008 (13:02 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் இன்று காலை டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 4 பைசா அதிகரித்தது.

காலையில் வர்த்தகம் ஆரம்பித்த போது 1 டாலர் ரூ.40.43 / 40.45 என்ற அளவில் இருந்தது. நேற்றைய இறுதி நிலவரம் ரூ.40.47/40.48.

சிறிது நேரத்திற்கு பின், வர்த்தகம் நடக்கும் போது 1 டாலர் ரூ.40.47 முதல் ரூ.40.48 வரை விற்பனையானது.

கடந்த ஆறு வாரங்களில் இல்லாத அளவிற்கு, இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று குறைந்தது.

வங்கிகள் அதிக அளவு டாலரை, விற்பனை செய்வதால் இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து, டாலரின் மதிப்பு அதிகரித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

அமெரிக்க ரிசர்வ் வங்கியின் கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது. இதில் வட்டி விகிதம் குறைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதனால் மற்ற நாட்டு செலவாணிகளுக்கு நிகரான டாலரின் மதிப்பு குறையும் என்பதால் வங்கிகள் அதிக அளவு டாலரை விற்பனை செய்கின்றனர் என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ள உறவை கைவிட மறுத்த மனைவி! ஆத்திரத்தில் அடித்துக் கொன்ற கணவன்!

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆதரவாளர் வீடுகளில் சிபிசிஐடி சோதனை.. பரபரப்பு தகவல்..!

தொடர் ஏற்றத்திற்கு பின் பங்குச்சந்தையில் திடீர் வீழ்ச்சி.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இன்று தங்கம் விலை ஏற்றமா? இறக்கமா? சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு? முழு விவரங்கள்..!

பா.ஜ.க. பிரமுகர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.. ரவுடிக்கு கள்ளத்துப்பாக்கி கொடுத்தாரா?

Show comments