Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பணவீக்கம் 7.41 விழுக்காடாக உயர்வு!

Webdunia
வெள்ளி, 11 ஏப்ரல் 2008 (14:00 IST)
பணவீக்க விகிதம் கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 7.41 விழுக்காடாக உயர்ந்துள்ளது.

உணவு தானியங்கள், காய்கறி, பழம், உருக்கு உட்பட பல்வேறு பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்து வருகிறது. மத்திய அரசால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு உயர்ந்து வருகிறது.

இதனால் பணவீக்கம் கடந்த 40 மாதங்களில் இல்லாத அளவிற்கு மார்ச் 29 ஆ‌ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 7.41 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

கடந்த வாரம் (மார்ச் 21 ஆ‌ம் தேத ி) பணவீக்கம் 7 விழுக்காடாக இருந்தத ு.

பணவீக்கத்தை கணக்கிடும் மொத்த விலை பட்டியலின் அளவுகோளின் படி இந்த வாரத்தில் காய்கறி விலை 4.1 விழுக்காடு அதிகரித்துள்ளது. பருப்பு வகைகள் 1.8, உணவு தானியங்கள் 1.2 விழுக்காடு உயர்ந்துள்ளது.

மொத்த விலை பட்டியலில் கணக்கிடப்படும் விலையை விட, பொது மக்கள் கடையில் வாங்கும் விலை பல மடங்கு அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மன்மோகன் சிங் நேற்று ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது, பல்வேறு பொருட்களின் விலை அதிகரித்து வருவதால் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவது கடினமாக உள்ளது என்று கூறினார்.

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மட்டுமல்லாமல், உருக்கு உட்பட பல்வேறு உலோகங்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் தொழில் துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

உருக்கு விலை 5.6 விழுக்காடு உயர்ந்துள்ளது. மற்ற உலோகங்களின் விலை 5 விழுக்காட்டிற்கம் மேல் அதிகரித்துள்ளது.

மார்ச் 29 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் எல்லா பொருட்களின் மொத்த விலை குறியீட்டு எண் 226.0 ஆக அதிகரித்து உள்ளத ு. இது சென்ற வாரம் 224.8 ஆக இருந்தத ு.

உணவுப் பொருட்களின் விலை குறியீட்டு எண் 0.4 விழுக்காடு அதிகரித்து குறியீட்டு எண் 227.2 ஆக உயர்ந்துள்ளத ு. இந்த வாரத்தில் பருப்பு வகைகள், பழங்கள ், காய்கறி, மீன், தனியா, நறுமன பொருட்களின் விலைகளும் உயர்ந்துள்ளது.

எள், கொப்பரை தேங்காய் விலை 4 விழுக்காடு உயர்ந்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காற்று மாசுபாட்டினால் இந்தியாவில் 33 ஆயிரம் மரணங்கள்.. சென்னையிலுமா? - அதிர்ச்சி ரிப்போர்ட்!

அமெரிக்காவில் ஒரு நாய் பட்டம் வாங்கியுள்ளது: தனது பேச்சுக்கு ஆர்.எஸ்.பாரதி விளக்கம்..!

விண்வெளிக்கு செல்லும் மனிதர்களில் பிரதமர் மோடியும் ஒருவராக இருப்பார்: இஸ்ரோ தலைவர் சோம்நாத்

நான் ஆர்.எஸ்.எஸ்-ன் ஏகலைவன்! துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பகிரங்க பேச்சு!

ஹத்ராஸ் வருகை தருகிறார் ராகுல் காந்தி.. பலியானோரின் குடும்பத்தினருடன் நேரில் சந்திப்பு..!

Show comments