Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாலர் மதிப்பு 4 பைசா உயர்வு!

Webdunia
புதன், 26 மார்ச் 2008 (13:24 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கிய போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 4 பைசா குறைந்தது.

இன்று காலையில் வர்த்தகம் தொடங்கிய போது 1 டாலர் மதிப்பு ரூ.40.15/40.16 என்ற அளவில் இருந்தது. இது நேற்றைய இறுதி நிலவரத்தைவிட 4 பைசா அதிகம். நேற்றைய இறுதி நிலவரம் 1 டாலரின் மதிப்பு ரூ. 40.11/40.12.

கடந்த நான்கு நாட்களாக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 61 பைசா அதிகரித்தது. இன்று பங்குச் சந்தையின் குறியீட்டு எண்கள் குறைந்ததால், முதன் முறையாக ரூபாயின் மதிப்பு குறைந்து டாலரின் மதிப்பு அதிகரித்தது.

கடந்த மூன்று நாட்களாக அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்தன. இதனால் அந்நியச் செலாவணி சந்தையில் டாலர் வரத்து அதிகளவு இருந்தது. இதன் காரணமாக டாலரின் மதிப்பு குறைந்து இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காற்று மாசுபாட்டினால் இந்தியாவில் 33 ஆயிரம் மரணங்கள்.. சென்னையிலுமா? - அதிர்ச்சி ரிப்போர்ட்!

அமெரிக்காவில் ஒரு நாய் பட்டம் வாங்கியுள்ளது: தனது பேச்சுக்கு ஆர்.எஸ்.பாரதி விளக்கம்..!

விண்வெளிக்கு செல்லும் மனிதர்களில் பிரதமர் மோடியும் ஒருவராக இருப்பார்: இஸ்ரோ தலைவர் சோம்நாத்

நான் ஆர்.எஸ்.எஸ்-ன் ஏகலைவன்! துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பகிரங்க பேச்சு!

ஹத்ராஸ் வருகை தருகிறார் ராகுல் காந்தி.. பலியானோரின் குடும்பத்தினருடன் நேரில் சந்திப்பு..!

Show comments