Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சோயா புண்ணாக்கு ஏற்றுமதி பாதிப்பு!

Webdunia
செவ்வாய், 18 மார்ச் 2008 (12:15 IST)
இந்தியாவில் இருந்து அந்நிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சோயா புண்ணாக்கு குறைந்துள்ளது.

இந்த நிதி ஆண்டில் பிப்ரவரி மாத இறுதிவரை 33.8 லட்சம் டன் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது சென்ற நிதி ஆண்டின் 11 மாதத்துடன் ஒப்பிடுகையில் 6.85 விழுக்காடு குறைவு.

சோயா புண்ணாக்கு ஏற்றுமதி நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் குறைந்திருந்தாலும், இந்த எண்ணெய் வருடத்துடன் ஒப்பிடுகையில் கணிசமாக அதிகரித்துள்ளது.

இது குறித்து சோயா எண்ணெய் ஆலைகள் சங்கத்தின் ஒருங்க ிண ைப்பாளர் ராஜேஷ் அகர்வால் கூறும் போது,
இந்த எண்ணெய் ஆண்டில் சோயா எண்ணெய் ஆலைகளின் வர்த்தகம் குறிப்பிடத்தக்க அளவு முன்னேறியுள்ளது.
2007 அக்டோபர் முதல் 2008 பிப்ரவரி வரை சோயா புண்ணாக்கு ஏற்றுமதி அதிகரித்துள்ளது.

இந்த ஐந்து மாதங்களில் 26.18 லட்சம் டன் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது சென்ற எண்ணெய் ஆண்டுடன் ஒப்பிடுகையில் ( ஐந்து மாதம ்) 19.20 விழுக்காடு அதிகம். சென்ற வருடம் 21.96 லட்சம் டன் ஏற்றுமதி செய்யப்பட்டது என்று கூறினார்.

சோயா புண்ணாக்கு மாட்டு தீவனம், கோழி தீவனம் போன்றவைகள் தயாரிக்க பயன்படுகிறது. இந்தியாவில் இருந்து அதிக அளவு சோயா புண்ணாக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால், இதன் விலை உள்நாட்டில் அதிகரிக்கிறது. இந்த ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும் என்று கால்நடை, கோழிப் பண்ணை உரிமையாளர்கள் கூறிவருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவர்களிடம் போதை மாத்திரை விற்பனை.. 13 பேர் கொண்ட கும்பல் கைது..!

இந்த ஆண்டு நாடாளுமன்றம்.. அடுத்த ஆண்டு சட்டமன்றம்.. கமல்ஹாசன்

அமலாக்கத்துறை நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றம் செல்வேன்: ஷங்கர்

3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்க டெண்டர்.. மின்சார வாரியம் அறிவிப்பு..!

1 மில்லியனை கடந்த அண்ணாமலையின் ஹேஷ்டேக்! திமுக செல்வாக்கு குறைகிறதா?

Show comments