Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நார் பொருட்கள் ரூ.45 கோடி ஏற்றுமதி ஒப்பந்தம்!

Webdunia
செவ்வாய், 18 டிசம்பர் 2007 (17:27 IST)
தேங்காய் நாரினால் தயாரிக்கப்படும் மிதியடி, தரை விரிப்பு போன்ற பொருட்கள் ரூ.45 கோடி மதிப்பிற்கு ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

கொச்சியில் சமீபத்தில் சர்வதேச நார் பொருட்கள் வர்த்தக கண்காட்சி நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளில் இருந்து நார் பொருட்கள் இறக்குமதியாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த வர்ததக கண்காட்சியை நடத்திய காயிர் போர்ட் சேர்மன் ஏ.சி.ஜோஸ் கூறியதாவது:

இந்த கண்காட்சின் போது ரூ.105 கோடிக்கான வர்ததக விசாரணை நடைபெற்றது. இது கூடிய விரைவில் வர்த்தக ஒப்பந்தமாக மாற வாய்ப்புள்ளது. இந்த கண்காட்சியால் முன்பு இருந்த அளவை விட 13.45 விழுக்காடு வர்த்தகம் அதிகரித்து இருக்கின்றது. இதில் 75 அரங்குகளில் நாரினால் தயாரிக்கப்பட்ட பல்வேறு வகையான பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன. உள்நாட்டில் இருந்து 100 வர்த்தகர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் ரூ.15 கோடி மதிப்புள்ள பொருட்கள் வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளனர். மேலும் ரூ.35 கோடிக்கான வியாபார விசாரணை நடந்துள்ளது என்று கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாங்களும் சென்னையில்தான் இருக்கோம்.. மழைநீர் வடிகால் பணிகள் முடியவே இல்லை! - பிரேமலதா விஜயகாந்த்!

சாவர்க்கர் பற்றி சர்ச்சை பேச்சு! ராகுல் காந்தி நேரில் ஆஜராக சம்மன்!

சபரிமலை மண்டல - மகரவிளக்கு பூஜை.. இணையத்தில் பதிவு செய்தால் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி..!

ஹெஸ்புல்லாவின் ரகசிய சுரங்கத்தை தகர்த்த இஸ்ரேல்! முக்கிய தலைவர் கொலை!

தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை ரத்து செய்த தீர்ப்பு: மறு ஆய்வு செய்ய கோரிய மனு தள்ளுபடி..!

Show comments