Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாலரின் மதிப்பு 3 பைசா உயர்வு!

Webdunia
வெள்ளி, 30 நவம்பர் 2007 (19:33 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் இன்று இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு அதிகரித்தது.

காலையில் வர்த்தகம் தொடங்கியவுடன் 1 டாலர் ரூ 39.72/ 39.73 என்ற விலையில் விற்பனையானது. (நேற்றைய இறுதி நிலவரம் 1 டாலர் ரூ.39.75/39.76).

ஆசிய பங்குச் சந்தைகளில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் அதிகளவு முதலீடு செய்ய துவங்கியுள்ளன. இதே போல் இந்திய பங்குச் சந்தையிலும் பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காண்பித்தன. இதனால் அதிகளவு டாலர் அந்நியச் செலாவணி சந்தையில் வரும் என்ற எதிர்பார்ப்பில் அந்நியச் செலாவணி சந்தையில் முதலீடு செய்பவர்கள் தங்களிடம் இருப்பில் உள்ள டாலரை விற்பனை செய்தனர். இதன் காரணமாக அந்நியச் செலாவணி சந்தையில் அதிகளவு டாலர் குவிந்தது. இதுவே இன்று டாலரின் மதிப்பு அதிகரித்ததற்கு காரணம் என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாங்களும் சென்னையில்தான் இருக்கோம்.. மழைநீர் வடிகால் பணிகள் முடியவே இல்லை! - பிரேமலதா விஜயகாந்த்!

சாவர்க்கர் பற்றி சர்ச்சை பேச்சு! ராகுல் காந்தி நேரில் ஆஜராக சம்மன்!

சபரிமலை மண்டல - மகரவிளக்கு பூஜை.. இணையத்தில் பதிவு செய்தால் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி..!

ஹெஸ்புல்லாவின் ரகசிய சுரங்கத்தை தகர்த்த இஸ்ரேல்! முக்கிய தலைவர் கொலை!

தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை ரத்து செய்த தீர்ப்பு: மறு ஆய்வு செய்ய கோரிய மனு தள்ளுபடி..!

Show comments