Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்சிட்பிளை பங்குச் சந்தையில் மூலதனம் திரட்டுகிறது!

Webdunia
செவ்வாய், 13 நவம்பர் 2007 (21:30 IST)
ஆர்சிட்பிளை இன்டஸ்டிரிஸ் ரூ.55 கோடி மூலதனம் திரட்டுவதற்காக பங்குகளை வெளியிட உள்ளது.

ஆர்சிட்பிளை பிளைவுட், லாமினேசன் செய்யப்பட்ட பிளைவுட், பல்வேறு வடிவமைப்புகள் பதித்த லாமினேசன் செய்யப்பட்ட பிளைவுட் ஆகியவற்றை தயாரித்து வருகிறது. இவை அறையின் தடுப்புகள் மேஜை, நாற்காலி உட்பட பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்ய பயன்படுகின்றன.

இந் நிறுவனம் புதிய தொழிற்சாலைகளை அமைப்பதற்காக பங்குச் சந்தையில் மூலதனம் திரட்ட உள்ளது. இதற்கான அனுமதி கேட்டு செபியிடம் கடந்த 5 ந் தேதி விண்ணப்பித்துள்ளது. இந்த பொது பங்குகள் வெளியீடப்பட்டு திரட்டப்படும் ரூ.55 கோடி கர்நாடக மாநிலத்தில் சிந்தாமணி என்ற ஊரில் லாமினேட் செய்யப்பட்ட பிளைவுட் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கவும், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ருத்ராபூரில் ஃபைபரை கொண்டு தயாரிக்கப்படும் பலகைகளை தயாரிக்கும் தொழிற்சாலைகளை அமைக்க பயன்படுத்தப்படும்.

அத்துடன் இந்நிறுவனம் பல்வேறு நவீன பிளைவுட்டுகளை தயாரிக்கவும், நடுத்தர, சிறிய நகரங்களிலும் விற்பனையை விரிவு படுத்தவும் திட்டமிட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைன் டிரேடிங்கில் ஒரு கோடி ரூபாய் இழப்பு… சென்னை இளைஞர் தற்கொலை!

சென்னை மாநகராட்சி திமுக கவுன்சிலர் ஏ.ஸ்டாலின் கட்சியில் இருந்து நீக்கம்: துரைமுருகன்

திருப்பதி தயிர்சாதம் பிரசாதத்தில் பூரான்? தேவஸ்தானம் அளித்த விளக்கம் என்ன?

கடும் எதிர்ப்பு எதிரொலி: இமாச்சல பிரதேசத்தில் கழிப்பறை வரி ரத்து..!

மனைவியுடன் பைக்கில் சென்று உணவு டெலிவரி செய்த சோமாட்டோ சிஇஓ: விளம்பர உத்தியா?

Show comments