Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா-பிரேசில்-தெ.ஆ. வர்த்தக இலக்கு 30 பில்லியின்-பிரதமர்!

Webdunia
புதன், 17 அக்டோபர் 2007 (17:22 IST)
இப்சா நாடுகளிடையே வரும ் 2012 ஆம் ஆண்டுக்குள் வர்த்தகம ் 30 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு நடைபெற இலக்கு நிர்ணயித்து செயல்பட வேண்டும் என்று தென் ஆப்ரிக்காவில் உள்ள பிரிட்டோரியாவில் நடைபெற்ற வரும் இப்சா அமைப்பின் இரண்டாவது மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார ்.

சர்வதேச அளவில் அரசியல் மற்றும் பொருளாதார வரிசையில் இப்சா நாடுகள் முக்கிய இடம் பெறும் வகையில் செயல்பட எடுக்க வேண்டிய உத்திகள் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் எடுத்துரைத்தார ்.

இப்சா அமைப்பில் இந்திய ா, பிரேசில ், தென்னாப்ரிக்கா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்ற ன. இந்த அமைப்பின் முதல் கூட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிரசில்லாவில் நடைபெற்றத ு.

தற்போது பிரிட்டோரியாவில் நடைபெற்று வரும் இந்த அமைப்பின் இரண்டாவது மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங், தென்னாப்ரிக்க அதிபர் தாபோ மெப்கி மற்றும் பிரேசில் அதிபர் லுல ா - ட ா - சில்வா மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்றுள்ளனர ்.

இம்மாநாட்டில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங ், மூன்று நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் வரும ் 2012 க்குள ் 30 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு நடைபெறும் வகையில் இணைந்து செயல்பட வேண்டுகோள் விடுத்தார ்.

மேலும் இந்த இலக்கை எட்ட வரும ் 2010 க்குள ் 15 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு மூன்று நாடுகளுக்கிடையே வர்த்தகம் நடைபெற வேண்டும் என்று கூறிய மன்மோகன் சிங ், நமது வர்த்தகர்கள் இந்த இலக்க ை 2009 ம் ஆண்டுக்குள் எட்டி விடுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார ். அதே போல ் 30 பில்லியன் டாலர் வர்த்தக இலக்கையும் மூன்று நாடுகளும் இணைந்த ு 2012 க்குள் எட்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார ்.

இப்சா நாடுகளுக்கிடையேயான வர்த்தகம் வரை சம்பந்தப்பட்ட ஆசுகார் தேவையான அனைத்து வளர்ச்சி சார்ந்த நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று உறுதி அளித்தார ். இப்சா உறுப்பு நாடுகளின் சந்தையில் உள்ள வாய்ப்புகளை இந்த மூன்று நாடுகளை சேர்ந்த வணிகர்கள் முழுவதுமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பு விடுத்தார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடும் எதிர்ப்பு எதிரொலி: இமாச்சல பிரதேசத்தில் கழிப்பறை வரி ரத்து..!

மனைவியுடன் பைக்கில் சென்று உணவு டெலிவரி செய்த சோமாட்டோ சிஇஓ: விளம்பர உத்தியா?

ரூ.50 கோடி கேட்டு மிரட்டியதாக‌ மத்திய அமைச்சர் மீது வழக்குப்பதிவு: பெங்களூரு போலீசார் அதிரடி..!

உச்சக்கட்ட போரில் இஸ்ரேல்; ஆயுதம் தர மறுத்த பிரான்ஸ்! - நேதன்யாகுவின் கோபமான பதில்!

நாங்களும் சென்னையில்தான் இருக்கோம்.. மழைநீர் வடிகால் பணிகள் முடியவே இல்லை! - பிரேமலதா விஜயகாந்த்!

Show comments