Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கி வட்டி மறு பரிசீலனை செய்ய வேண்டும் : சிதம்பரம்!

Webdunia
வெள்ளி, 5 அக்டோபர் 2007 (19:17 IST)
தொழில் வளர்ச்சியை அதிகரிக்க வங்கிகள் கடனுக்கு விதிக்கும் வட்டியை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கூறினார ்.

இந்க வருடம் ஜூலை மாதத்தில் தொழில் வளர்ச்சி 7.2 விழுக்காடாக உள்ளத ு. சென்ற வருடம் ஜூலை மாதத்தில் தொழில் வளர்ச்சி 13.2 விழுக்காடாக இருந்தத ு.

அத்துடன் பொருட் கள ் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் வளர்ச்சியும் குறைந்துள்ளத ு. இந்த ஆண்ட ு, இந்த துறையின் வளர்ச்சி விகிதம் மே மாதத்தில் 11.7 விழுக்காடாக இருந்தத ு. இது ஜூன் மாதத்தில் 9.8 விழுக்காடாக குறைந்தத ு. ஜூலை மாதத்தில் மேலும் குறைந்து 7.2 விழுக்காடானத ு.

தொழில் துறையின் வளர்ச்சி குறைந்தால ், அது நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும ். அத்துடன் பொருட்கள் உற்பத்தி செய்ய தேவையான கச்சாப் பொருட்கள ், உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் மீது விதிக்கப்படும் உற்பத்தி வர ி, விற்பனை வரி போன்ற பல்வேறு இனங்கள் மூலம் மத்திய மாநில அரசுகளுக்கு கிடைக்கும் வரி வருவாய் பாதிக்கப்படும ்.

இதனால் மத்திய அரசு கவலை அடைந்துள்ளத ு.

தொழில் வளர்ச்சியை அதிகரிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக் க, டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம ், வங்கி இயக்குநர்கள ், தொழில் அதிபர்கள் கலந்து கொள்ளும் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார ்.

இந்த கூட்டத்தில் ப. சிதம்பரம் கூறியதாவத ு :

ஜூலை மாதத்தில் தொழில் வளர்ச்சி குறைந்திருப்பது கவலை அளிக்கிறத ு. தொழில் வளர்ச்சி குறையக்கூடாத ு. இதை அதிகரிக்க எல்லா நடவடிக்கையும் எடுக்க வேண்டும ். தொழில் வளர்ச்சி குறைந்தால் அது பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும ். உற்பத்தி பொருட்களின் விலை வாங்கும் அளவில் நிர்ணயித்த ு, இதன் தேவையை அதிகரிக்க வேண்டும ். இதற்கு பல்வேறு நிதி உதவிகள் செய்ய வேண்டும ்.

வளர்ச்சியை அதிகரிக்க வங்கிகள ், வட்டி விகிதங்களை மறு பரிசீலனை செய்ய வேண்டும ். வங்கிகள் தொழில் துறையினர் கடன் வாங்குவதற்கு ஏற்ற சூழலை உருவாக்க வேண்டும் என்று சிதம்பரம் கூறியுள்ளார ்.

இதில் அதிகமான வட்டியினால் வாகனங்களின் விற்பனை குறைந்திருப்பத ை, வாகன உற்பத்தியாளர்கள் சுட்டிக் காட்டியதாக டாடா மோட்டார் மேலாண்மை இயக்குநர் ரவிகாந்த் தெரிவித்தார ்.

வட்டி உயர்வு முக்கியமான விஷயமாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிவித்த பஞ்சாப் நேஷனல் வங்கியின் மேல ாண்மை இ யக்குநர் க ே. ச ி. சக்கரவர்த்த ி, வங்கிகள் சாதகமான சூழலை உருவாக்க வேண்டும் என நிதி அமைச்சர் வங்கிகளை கேட்டுக் கொண்டார ். நாங்கள் இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கான வழியை காண முயற்சிப்போம் என்று கூறினார ். ஆனால ், பஞ்சாப் நேஷனல் வங்கி வட்டியை குறைக்குமா என்று கேட்டதற்கு கருத்து தெரிவிக்க அவர் மறுத்து விட்டார ்.

பாரத ஸ்டேட் வங்கியின் மேல ாண ்மை இயக்குநர் பட ், ரிசர்வ் வங்கி அக்டோபர் 30 ஆம் தேதி இடைக்கால நிதி கொள்கையை அறிவிக்கும் வர ை, இப்போதுள்ள வட்டி விகிதங்களே தொடரும் என்று தெரிவித்தார ்.

பலாபூர் இன்டஸ்டிரிஸ் தலைவர் கவுதம் தபார ், பேப்பர் உற்பத்தி துறையும் வட்டியை குறைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளத ு. இந்த வருடம் பேப்பர் தேவை அதிகமாக இருக்கிறத ு. தற்போதுள்ள சூழ்நிலையின் பாதிப்ப ு, அடுத்த நிதியாண்டில் தான் தெரியும் என்று கூறினார ்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பாரத ஸ்டேட் வங்கியின் தலைவரும ், மேலாண்மை இயக்குநருமான ஓ. ப ி. பட ்., ஐ. ச ி.ஐ. ச ி.ஐ. வங்கியின் தலைவரும் மேல ாண ்மை இயக்குநருமான க ே. வ ி. காமத ், பஞ்சாப் நேஷனல் வங்கியின் தலைவரும் மேலாண்மை இயககுநருமான க ே. ச ி. சக்கரவர்த்த ி, பாங்க ஆப் இந்தியாவின் தலைவரும் மேலாண்மை இயக்குநருமான ப ி. எஸ ். நாராயண சாம ி, மாருதி உத்யோக் தலைவரும் மேலாண்மை இயக்குநருமான ஜெகதீஷ் கட்டார ், டாடா மோட்டார் தலைமை செயல் அதிகாரி ரவி காந்த ், மகேந்திரா அண்ட் மகேந்திரா செயல் இயக்குநர் பாரத் ஜோஷி மற்றும் பலாப்பூர் இண்டஸ்டிரிஸ் தலைவர் கவுதம் தபார் ஆகியோர் கலந்து கொண்டனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடும் எதிர்ப்பு எதிரொலி: இமாச்சல பிரதேசத்தில் கழிப்பறை வரி ரத்து..!

மனைவியுடன் பைக்கில் சென்று உணவு டெலிவரி செய்த சோமாட்டோ சிஇஓ: விளம்பர உத்தியா?

ரூ.50 கோடி கேட்டு மிரட்டியதாக‌ மத்திய அமைச்சர் மீது வழக்குப்பதிவு: பெங்களூரு போலீசார் அதிரடி..!

உச்சக்கட்ட போரில் இஸ்ரேல்; ஆயுதம் தர மறுத்த பிரான்ஸ்! - நேதன்யாகுவின் கோபமான பதில்!

நாங்களும் சென்னையில்தான் இருக்கோம்.. மழைநீர் வடிகால் பணிகள் முடியவே இல்லை! - பிரேமலதா விஜயகாந்த்!

Show comments