Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் வியாபாரிகளின் எதிர்ப்பால் ரீலையன்ஸ் ஃப்ரஷ், சுபிக்சா கடைகள் மூடப்பட்டன!

Webdunia
வியாழன், 20 செப்டம்பர் 2007 (18:20 IST)
பன்னாட்டு நிறுவனங்கள ், பெரிய வர்த்தக நிறுவனங்கள் சில்லரை வணிகத்தில் ஈடுபடத் துவங்கியுள்ள ன. இதற்காக பெரு நகரங்களிலும ், முக்கியமான நகரங்களிலும் சங்கிலித் தொடர் போல் கடைகளை திறந்து வருகின்ற ன. இதில் மளிக ை, காய்கற ி, பழங்கள ், தினசரி தேவைப்படும் மளிகை பொருட்கள் உட்பட பல்வேறு பொருட்களை விற்பனை செய்கின்ற ன.

சில்லரை வர்த்தகத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள ், உள்நாட்டைச் சேர்ந்த பெரிய நிறுவனங்களை அனுமதிக்க கூடாத ு. இதனால் இலட்சக்கணக்கான சில்லறை வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள் என தொடர்ந்து வியாபாரிகள் தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறத ு.

இந்த எதிர்ப்பிற்கு இடையே ரிலையன்ஸ் நிறுவனம் டெல்ல ி, சென்னை உட்பட முக்கிய நகரங்களில் காய்கற ி, பழங்கள் விற்பனை செய்வதற்காக ரிலையன்ஸ் ஃப்ரஷ் என்ற பெயரில் சில்லரை விற்பனை கடைகளை திறந்துள்ளத ு. இதே போல் சுபிக்சா நிறுவனமும் மளிகை பொருட்களை விற்பனை செய்து வருகின்றத ு.

இன்று தலைநகர் டில்லியில் ராஷ்ட்டிரிய வியாபார் மண்டல் ( தேசிய வியாபாரிகள் சங்கம ்) என்ற வியாபாரிகள் சங்கத்தைச் சேர்ந்த 300 முதல் 400 வியாபாரிகள் கிழக்கு டில்லியில் உள்ள ரிலையன்ஸ ், சுபிக்சா கடைகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள ். இவர்களின் எதிர்ப்பால் இரண்டு கடைகளும் மூடப்பட்ட ன.

மத்திய பிரதேஷத்தில் உள்ள ரிலையன்ஸ் கடைகளை இரண்டு வாரங்களுக்கள் இழுத்து மூடுமாறும் அல்லது பிரச்சனையை எதிர்கொள்வதற்கு தயாராக இருக்குமாறும் எச்சரித்து ரிலையன்ஸ் சேர்மன் முகேஷ் அம்பானிக்கு பாரதிய ஜனசக்தி கட்சியின் தலைவர் உமாபாரதி சென்ற் மாதம் கடிதம் எழுதியிருந்தார ்.

இந்த கடிதம் எழுதிய மறுநாளே ராஷ ்ட ்டிரிய வியாபார் மண்டலைச் சேர்ந்த வியாபாரிகளால் ரிலையன்ஸ் ஃப்ரஸ ், ஆர ். ப ி. ஜி என்டர் பிரைசசை சேர்ந்த ஸ்பென்ஷர் சூப்பர் மார்க்கெட் அடித்து நொறுக்கப்பட்ட ன.

கடந்த மாதம் உத்தரபிரதேச முதலமைச்சர் மாயாவத ி, உத்தரபிரதேசத்தில் உள்ள ரிலையன்ஸ் ஃப்ரஷ் கடைகளை மூடும் படி உத்தரவிட்டார ். சில்லறை வணிகத்தில் நவீன சூப்பர் மார்க்கெட்டுகளை அனுமதிப்பதால ், சில்லரை வியாபாரிகள் எந்தளவு பாதிக்கப்படுவார்கள் என்பதை ஆய்வு செய்து முடிக்காமல் இருப்பதால ், ரிலையன்ஸ் கடைகளை மூடும்படி உத்தரவிடப்பட்டுள்ளதாக மாயாவதி தெரிவித்திருந்தார ்.

இதே போல் கொல்கத்தாவில் திறக்க திட்டமிட்டிருந்த ரிலையன்ஸ் ஃப் ரஷ ் கடைய ை, ஆளும் இடது முண்ணனியில் பங்கு பெற்றுள்ள பார்வர்ட் ப்ளாக் கட்சியின் எதிர்ப்பால ், ரிலையன்ஸ் நிறுவனம் ஒத்திவைத்தத ு.

உத்த ரப ்பிரதேசம ், மத்தியப்பிரதேசம ், கேரள ா, ஜார்கண்ட ், மேற்கு வங்காளம் உட்பட பல்வேறு மாநிலங்களில ், சில்லரை வணிகத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள ், உள்நாட்டு பெரிய வர்த்தக நிறுவனங்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள ், தங்களின் எதிப்பின் அடையாளமாக ரிலையன்ஸ் ஃப்ரஷ் கடைகளை தேர்ந்தெடுத்து எதிர்ப்பு தெரிவிக்கின்றனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை சவக்கிடங்கில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி பாலாஜி உடல்.. போலீஸ் பாதுகாப்பு..!

ஆப்பிரிக்காவில் நிலவும் கடும் பஞ்சம்! 200 யானைகளை கொன்று உணவாக்க திட்டம்! - ஜிம்பாப்வே எடுத்த முடிவு!

என்ன முடி இது..? ஒழுங்கா வெட்டிட்டு வா! திட்டிய பாட்டி! - சிறுவன் எடுத்த விபரீத முடிவு!

சென்னை பல்கலை பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்போம்.. அரசுக்கு ஆசிரியர்கள் கடிதம்..!

22 ஆண்டுகளுக்கு பின் செப்டம்பரில் அதிக வெப்பம்! தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

Show comments