பங்குச் சந்தைகளில் பெரும் வீழ்ச்சி!

Webdunia
புதன், 1 ஆகஸ்ட் 2007 (17:44 IST)
அமெரிக்க கடன் சந்தையில் ஏற்பட்ட சரிவும், அதன் விளைவாக அந்நிய நேரடி முதலீட்டாளர்கள் பங்குகளை பெருமளவிற்கு விற்க முன்வந்தததன் காரணமாகவும் இந்தியப் பங்குச் சந்தைக் குறியீடுகள் இன்று பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தன!

இன்று ஒரே நாளில் மும்பை பங்குச் சந்தைக் குறியீடு 615 புள்ளிகள் சரிந்து 15,000க்கும் கீழ் இறங்கி 14,935.77 புள்ளிகளில் முடிந்துள்ளது.

ஒருகட்டத்தில் 14,910 புள்ளிகளுக்குச் சரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டிற்கு அடிப்படையான 30 பங்குகளின் விலைகளிலும் சரிவு ஏற்பட்டது.

தேச பங்குச் சந்தை 183 புள்ளிகள் குறைந்து 4,345.85 புள்ளிகளாக குறைந்தது.

அமெரிக்காவின் கடன் சந்தையில் ஏற்பட்ட தடுமாறலும், அதன் விளைவாக நியூயார்க் உள்ளிட்ட அந்நாட்டுப் பங்குச் சந்தைகளிலும், ஐரோப்பிய சந்தைகளிலும் ஏற்பட்ட சரிவே இந்தியப் பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்துள்ளது என்று பங்குச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒவ்வொரு வீட்டிலும் ஒரு விஜய் இல்லை.. மூன்று விஜய் இருந்திருக்காங்க.. தேர்தலுக்கு பிந்தைய ஆய்வில் ஆச்சரியம்..!

மனைவியை கொன்று சிமெண்ட் பெட்டிக்குள் மறைத்த கணவன்.. காணவில்லை என நாடகம்..!

பிரியாணி விருந்து வைத்து கொண்டாட்டம்.. மறுநாள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி..!

மே 4ம் தேதி 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை!.. அர்ச்சனா பட்நாயக் தகவல்!..

மேற்கு வங்க தேர்தல்!.. கரண்ட் கட் பண்ணி ஓட்டு மிஷனை கைப்பற்ற முயற்சி!.. மம்தா குற்றச்சாட்டு!...

Show comments