Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.ஒ.சி.எல் திருச்சி பெல்லுக்கு ரூ.430.50 கோடிக்கு ஆணை!

Webdunia
சனி, 7 ஜூலை 2007 (18:44 IST)
இந்தியன் ஆயில் கார்பரேசன் நிறுவனத்தின் (ஐ.ஓ.சி.எல்) வதோதரா திட்டத்துக்கான ரூ430.50 கோடி பணி ஆணையை திருச்சி பாரத மிகுமின் நிறுவனம்(பெல்) பெற்றுள்ளது.

குஜராத் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் படிவுகள் மேம்பாடு மற்றும் தர மேம்பாட்டு திட்டத்துக்காக வாயுச் சூழலிகள் வெப்ப மீட்பு நீராவி உற்பத்தி அமைப்புகளை வடிவமைத்து, தயாரித்து அளித்து, நிறுவி இயக்கி வைப்பதற்காக இந்த ஆணை வழங்கப்பட்டுள்ளது.

பாரத மிகுமின் நிறுவனத்தின் திருச்சி பிரிவு ஒரு மணநேரத்துக்கு 100 டன் திறனுடைய இரு வெப்ப மீட்பு நீராவி உற்பத்தி அமைப்புகளை தயாரித்து வழங்க இருக்கிறது. ஹைதராபாத் பிரிவு வாயுச் சூழலிகளை தயாரித்து வழங்கும்.

மேற்கண்ட தகவலை திருச்சி பெல் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதி துணை முதல்வரானால் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல்? - ஆர்.பி.உதயக்குமார்!

எந்த பிராண்ட் மதுபானங்களும் வெறும் ரூ.99 தான்.! ஆந்திர அரசு அதிரடி - உற்சாகத்தில் மதுப்பிரியர்கள்.!!

உணவகத்திற்கு சத்துணவு முட்டைகள் விற்பனை- சத்துணவு திட்ட அமைப்பாளர் வசந்தகுமாரி சஸ்பெண்ட்.!!

பெரியாரின் நெஞ்சில் ஈட்டியை குத்தியிருக்கிறது திமுக அரசு! டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு..!

கடன் தொல்லை.. 3 மகன்களுக்கு விஷம் கொடுத்த தாய்.. தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்..!

Show comments